இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்துக்கு பிரதமர் அனுதாபம் தெரிவிப்பு.

சுமார் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்த இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அனுதாபம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் ஒடிசாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து மேலும் பலர் காயமடைந்த நிகழ்வையிட்டு தாம் பெரிதும் கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.