பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ජාතික මට්ටමින් ටයිකෝට් ඇදගෙන කළ හොරකම්, ප්‍රාදේශීය සභා මට්ටමින් අමු අමුවෙි කළා. ආයේ එහෙම වෙන්න ඉඩ තියන්නේ නෑ - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

ජාතික මට්ටමින් ටයිකෝට් ඇදගෙන කළ හොරකම් ප්‍රාදේශිය සභා මට්ටමින් එළිපිට සිදුකළ බවත් ඉදිරියට එවැන්නක් සිදුවීමට ඉඩ නොතබන බවත් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

හොරණ සහ බුලත්සිංහල ප්‍රදේශවල පැවති ජනහමු අමතමින් අග්‍රාමාත්‍යවරිය මේ බව පැවසීය.

මෙහිදී වැඩිදුරටත් අදහස් දැක් වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය,

දැන් ජනාධිපති ධූරයත් තියෙනවා, පාර්ලිමේන්තුවේ දැවැන්ත බලයක් තියෙනවා, තව මොනවද ඕන රට හදන්නේ කියලා ඔබට හිතෙනවා ඇති.

හැබැයි ඔබ සියලු දෙනාම පිළිගන්නවා ඇති ප්‍රාදේශීය සභාවකින් විය යුතු වැඩක් තියෙනවා. කළ යුතු සේවාවක් තියනවා.

ප්‍රජාතන්ත්‍රවාදය කියන එක පවතින්නේ තමන් පත් කරගත්ත මහජන නියෝජිතයින් හරහා සිද්ධවෙන වැඩ තුළින්, ගමට සමීපතම නියෝජිතයා ප්‍රාදේශීය සභාවේ තමයි ඉන්නේ. ඔබේ එදිනෙදා ජීවිතය පහසු කරන බොහෝ කටයුතුවලට වගකියන්න ඕනේ ප්‍රාදේශීය සභාව.

ජාතික මට්ටමින් ටයිකෝට් ඇදගෙන හොරකම් කළා. පලාත්පාලන ආයතන ටයි කෝට් නොමැතිව අමු අමුවේ හොරකම් කළා.ඒකනේ මෙතෙක් සිද්ධ වුණේ. ප්‍රාදේශීය සභා කියන ඒවා මිනිස්සුන්ට සත පහකට වැඩක් වුනේ නැහැ. ඒක තමා ඇත්ත කතාව. යළි එහෙම වෙන්න අපි ඉඩතියන්නේ නැහැ.

දරුවෙක් පිළිසිඳ ගත්ත මොහොතේ සිටම ප්‍රාදේශීය සභාවට වැඩ තියෙනවා, මාතෘ සායන පවත්වන්න ඕන, දරුවා එන්නත් කරන්න ඕන, ඉපදුණායින් පස්සේ දරුවන්ගේ සෞඛ්‍යයට වග කියන්න ඕන, මව්වරුන්ගේ සෞඛ්‍යයට වග කියන්න ඕන, දරුවන්ගේ මව්වරුන්ගේ පෝෂණ තත්ත්වයට වග කියන්න ඕන. පෙර පාසැල් දිවාසුරුකුම් පවත්වාගෙන යන්න ඕන, ප්‍රාථමික අධ්‍යාපනය, ද්විතීක අධ්‍යාපනය, දරුවන්ට අවශ්‍ය ගමේ සේවාවන් පුස්තකාල, රංගශාලා, තරුණ සංගම්, තරුණ සමිති, තරුණ තරුණියන්ට සෞඛ්‍ය වර්ධනය, අමතර පන්ති පැවැත්වීම කරන්න ඕන.

වැඩිහිටියන්, කාන්තාවන්, ව්‍යවසායකයින් වෙනුවෙන් කරන්න වැඩකොටසක් තියනවා. අන්තිමට සොහොනට යනකොට ඒකත් ගෞරවාන්විත විදිහට යන්න පුලුවන් විදිහට හදන ඒකත් ප්‍රාදේශීය සභාවේ වගකීම.

මේ සියල්ලට මැදිහත් වෙන්න ප්‍රාදේශීය සභාවට විශාල බලයක් ඇති බවත්, එළඹෙණ මැයි හය වන දින හොරුන්ගෙන් ප්‍රාදේශිය සභාව බේරා ගැනීමට ඉදිරියට එන ලෙසත් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන නිහාල් අබේසිංහ, ඔෂානි උමංගා, නන්දන පද්ම කුමාර යන මහත්ම මහත්මීන් ඇතුළු විශාල පිරිසක් සහභාගී වූහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

We are in need of revered guidance of the Maha Sangha in strengthening the Piriven and Bhikkhu Education. - Prime Minister Dr. Harini Amarasuriya

Speaking at the 125th anniversary celebrations of the Amarapura Ariyavansa Saddhamma Yukthika Nikaya, Prime Minister Dr. Harini Amarasuriya humbly requested.

Prime Minister Dr. Harini Amarasuriya stated that there is a contemporary need to develop the Pirivena and Bhikkhu education and that the government is seeking the revered guidance of Maha Sangha in that cause.

The Prime Minister made these remarks while addressing the 125th anniversary celebrations of the Amarapura Ariyavansa Saddhamma Yukthika Nikaya today (29) at the Sri Subodhi Rajarama Mulasthana Maha Vihara in Bombuwala, Kalutara.

During the event, the Prime Minister honored sixty-three venerable members of the Maha Sangha who had rendered their noble service to the Sasana and also conferred awards upon several distinguished lay benefactors in recognition of their contributions.

Addressing the keynote speech, the Prime Minister further stated:

There has always been a strong bond between Buddhism and society throughout the history. Culture and social relations have been built alongside the Buddhist philosophy. The society we seek to establish as a nation must embody the Buddhist values of fairness, equality, and compassion. These virtues, as taught in the Buddhist philosophy, are ever relevant and alive.

Piriven and Bhikkhu education are currently facing numerous challenges, and considerable efforts are needed to address them. Thereby a substantial and concerted intervention is required.

A pertinent question arises as whether our Pirivena institutions adequately preparing for the evolving needs of the world? There was once a belief in Europe that, with scientific advancement, religion would become redundant. Today, this view has been discredited. Along with material progress, spiritual development remains indispensable.

The knowledge, attitudes, and skills of our Bhikkhus must be enhanced to meet the emerging global challenges. A profound discussion on necessary reforms in Piriven and Bhikkhu education is therefore imperative.

Opportunities for Bhikkhus to study subjects such as mathematics, science, and modern languages are currently limited. Without exposure to contemporary disciplines, it is questionable whether one can successfully confront present-day challenges.

The event, held under the patronage of the Venerable Egodamulle Amaramoli Mahanayake Thera, the Chief incumbent of the Amarapura Ariyavansa Saddhamma Yukthika Nikaya, was attended by members of the Maha Sangha, Minister of Mass Media and Health Mr. Nalinda Jayatissa, several Members of Parliament, and numerous lay devotees.

Prime Minister’s Media Division

கொழும்பு அதன் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மையால் அழகாக இருக்கிறது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது நகரத்தை மிக அழகான நகரமாக மாற்றுவோம். அந்த நோக்கத்துடன், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள தெமட்டகொட, கொட்டாஞ்சேனை, மருதானை மற்றும் கொம்பனியவீதி ஆகிய இடங்களில் ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

கொழும்பு மாநகர சபையின் வருடாந்த வருமானம் 30 பில்லியன் ரூபாவாகும். கொழும்பில் ஒரு வசதிபடைத்த நகரசபை உள்ளது. இந்த நகர சபையில் என்ன குறைவு? இந்தப் பகுதிகளை எவ்வளவு முன்னேற்ற முடியும்? மக்கள் பற்றிய எந்த உணர்வும் இல்லை. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய எந்த்த் தேவையும் இல்லை. நாம் இதைச் சொன்னாலும், நாம் எதுவும் செய்ய முடியாது. கொழும்பு மாநகர சபையைப் பற்றி நாம் நினைக்கும் போது, பொதுவாக ஒரு பெரும் திருட்டுக்கள் நிறைந்த இடம் பற்றித்தான் எமக்கு நினைவுக்கு வரும். நகர சபையைப் பற்றிய நமது பிம்பம் என்னவென்றால், அது பணத்தை வீணடிக்கிற, நம்மை இங்கும் அங்கும் அலையச் செய்கிற, எதையும் செய்து முடிக்க இயலாத ஒரு இடம். இந்த நிலை மாற வேண்டும். இந்த நாட்டை மாற்றும் பயணத்தை இந்த நாட்டு மக்கள் 2024 ஆம் ஆண்டு தொடங்கினர். இந்த நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்த இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல். அதன் மூலம், இப்போது அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் எம்மிடம் உள்ளது. உங்கள் அனைவரின் குரலையும், உங்கள் அனைவரின் தேவைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் எங்களிடம் உள்ளது.

உங்களுக்கு நினைவிருக்கலாம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தேர்தல் 2023 இல் நடத்தப்படவிருந்தது. நாங்கள் கீழிருந்து ஆரம்பிக்கலாம் என்று சொன்னோம். ஆனால் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க என்ன செய்தார்? தேர்தலை இல்லாமல் செய்தார். வழக்கு தாக்கல் செய்தே இந்தத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி பெற்றது. வழக்குகள் மூலமே எங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடிந்தது. அதனால்தான் இந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் இரண்டு ஆண்டுகள் தாமதமாக வந்தாலும், அவற்றை நடத்தும் வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது. 2024 இல் நீங்கள் தொடங்கிய வரலாற்றுப் பயணத்தை நாங்கள் நகர சபை வரை எடுத்துச் செல்வோம்.

எதிர்கட்கள் எங்களைப் பற்றி பல விடயங்களையும் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் திருடுகிறோம் என்று அவர்களால் சொல்ல முடியாது. நாங்கள் மக்களின் பணத்தைப் பாதுகாக்கிறோம். தோழர் அனுர குமார வெற்றி பெற்ற நாளிலிருந்து, ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் காட்டி வருகிறோம்.

இந்த முகங்களைப் பார்க்கும் போது நாம் என்ன சொல்ல முடியும்? மே 6 ஆம் திகதி கொழும்பு நகரை தேசிய மக்கள் சக்தி வெல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எமது சகோதரி விரோய் மேயராக தெரிவாவார். அதை மறுபடியும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த நகரத்தில் உங்களை நன்கு அறிந்த ஒரு மேயர் இப்போது உங்களிடம் இருக்கிறார், அவரை நீங்கள் அணுகி பேசலாம். அவர் திறமையான ஒரு குழுவுடன் மேயராகப் போகிறார். நாம் உண்மையிலேயே பெருமைப்படும் வகையில் இந்த நகரத்தை அபிவிருத்தி செய்து அழகுபடுத்த வேண்டும் என்ற மிகுந்த ஆசை அவருக்கு இருக்கிறது.

உங்கள் எல்லாருக்கும் கனவுகள் உள்ளதென்பது எனக்குத் தெரியும். இங்குள்ள இந்தப் பிள்ளைகள், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைக் கொண்டுள்ளனர். எமது கல்வி முறையை நாம் சரிசெய்ய வேண்டும். நாங்கள் முன்பள்ளியை நகர சபையிடம் ஒப்படைத்தது போலவே, நாட்டில் கல்வியை தேசிய அளவில் கட்டியெழுப்ப பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கான ஒரு பெரிய தேவை இருக்கிறது.

எல்லா பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்ல விரும்பும் வகையில் பாடசாலையை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். பிள்ளைகளுக்கு சுமையாக இல்லாத வகையில், பெற்றோருக்கு சுமையாக இல்லாத வகையில், பிள்ளைகள் விருப்பத்துடன் கற்கும் வகையில் கல்வி மாற்றப்பட வேண்டும். பாடசாலைக்குச் சென்று புத்தகங்களுக்குள் மட்டும் இருந்து பரீட்சைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுவதை விட, கல்வியின் மூலம் உலகை எவ்வாறு திறந்து விரிவுபடுத்துவது என்பதை நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

கொழும்பு நகரம் மிகவும் சிறப்பு வாய்ந்த இடம். இந்தப் பகுதி இன்னும் தனித்துவமான ஒன்றையும் கொண்டுள்ளது. நான் இங்கு வந்தபோது, ஒரு அழகான கோவிலைக் கடந்து சென்றேன். எதிரே ஒரு புத்தர் சிலை. இங்கு அன்மை மரியாளின் சிலை உள்ளது. பள்ளிவாயல் வெகு தொலைவில் இல்லை. இந்தப் பன்முகத்தன்மை எமக்கு மதிப்பைக் கொண்டுவருகிறது. இது ஒரு சிறிய இடத்தில் அமைந்திருந்தாலும், ஒருவருக்கொருவர் புரிதலையும் உணர்வுகளையும் அதிகரிக்கும் இடமாகும். அருகிலுள்ள கடைக்குச் சென்றாலும் சுவையான உணவு கிடைக்கும். அந்த சுவை வேறு எங்கும் கிடைக்காது.

நாங்கள் சுற்றுலா பற்றி பேசுகிறோம். எமது சுற்றுலாத் துறை பிரச்சாரத்தின் போது வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இவற்றைப் பார்க்க வேண்டும். இந்த அனுபவம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அவை அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும். இங்கு வருவதற்கான உணர்வை ஏற்படுத்தும் வகையில் அதைக் கட்டமைக்க வேண்டும். இந்த விடயங்களுக்காக நாம் இந்த நகரத்தைப் பிரபலப்படுத்த வேண்டும். கொழும்பு வெறும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைப் பற்றியது மட்டுமல்ல, அது மிகவும் வளமான மற்றும் அழகான கலாச்சாரத்தைக் கொண்ட பன்முகத்தன்மை நிறைந்த நகரம் என்பதையும் நாம் முழு உலகிற்கும் காட்ட வேண்டும்.

புதிய கல்வி முறையுடன் நாங்கள் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்ற நீங்கள் எங்களுக்கு பெரும் பலத்தை அளித்தீர்கள். நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் உங்களுடன் கலந்துரையாடிய அனைத்து விடயங்களையும், உங்களுடன் நாங்கள் செய்த சமூக ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளையும் செயற்படுத்துவதற்காகவே நாம் அதிகாரத்தைப் பெற்றோம். அதை செயற்படுத்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அந்த செயன்முறையை மேற்கொள்ள ஒரு நல்ல நகர சபையை உருவாக்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட எங்கள் முதலாவது வரவுசெலவுத்திட்டதில், பாலர் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. வீதிகள் அமைக்க பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் முகாமைத்துவம், கழிவு மற்றும் வடிகால் அமைப்புகளை நிர்மாணிப்பதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும், உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வரும் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அவற்றுக்கு நிவாரணம் வழங்கவும் தேவையான ஏற்பாடுகளை நாங்கள் ஒதுக்கியுள்ளோம். அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள அந்தப் பணம், பல தியாகங்கள் மூலம் மக்களுக்காகச் சேகரிக்கப்பட்ட பணம், நாம் அவற்றை திருடர்களிடம் ஒப்படைக்க முடியாது. அதைச் செய்ய முடியாது. அதனால்தான் நகர சபையை தூய்மைப்படுத்த வேண்டும். எங்களுக்கு செய்வதறுக்கு நிறைய பணிகள் உள்ளன. நாங்கள் அதிகாரத்திற்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது, இன்னும் நிறைய வேலைகள் மீதமுள்ளன பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது என்று நாங்கள் இப்போது கூறுகிறோம். அடுத்து, நாம் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் யுவதிகளுக்கு, பெண்களுக்கு சுயதொழில்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை முறையாக செயற்படுத்தக்கூடிய நம்பகமானவர்களை உருவாக்குவது முக்கியம்.

அவற்றை செயற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதனால்தான் இங்குள்ளர்களைப் போன்ற திறமையான குழுவை நகர சபைக்கு தெரிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, ஹேமந்த விஜேகோன், கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் விரோய் கெலீ பல்தசார் மற்றும் வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை நாம் அகற்றியுள்ளோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். சித்தியடையாத பிள்ளைகளுக்காக எமது அரசாங்கத்திடம் வேலைத்திட்டமொன்று உள்ளது.

எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹுங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நேற்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை நாங்கள் அகற்றியுள்ளோம். அந்த மக்கள் விரோத ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் இனி எந்தப் பாதுகாப்பும் இல்லை. இதனால் பயந்து குழப்பமடைந்தவர்கள் அரச சேவையிலும் உள்ளனர். பாதுகாப்புத் தரப்பிலும் உள்ளனர். இவற்றையெல்லாம் அரசியல் ஆசீர்வாதத்துடனேயே மேற்கொண்டு வந்தனர். இப்போது அரசியல் ஆசீர்வாதம் இல்லாமல் போய்விட்டதால், எஞ்சிய முடிச்சுகளை அவிழ்க்க இது உள்நோக்கித் திருப்பப்பட்டுள்ளது. இப்போது அதனைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

அதன் இரண்டு மிகவும் பிரபலமான சம்பவங்களில் ஒன்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டதாகும். பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டமை. இதற்கு முன்பு பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதற்காக பாராளுமன்றம் மூன்று பேர் கொண்ட குழுவையும் நியமித்துள்ளது. இன்று, அந்தக் கும்பலால் பாதுகாக்கப்பட்டவர்கள் கூட பயப்படுகிறார்கள்.

முன்னைய ஆளும் கட்சியில் அமைச்சரவை பதவிகளை வகித்த பிள்ளையான் போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கேயும் சில வேடிக்கையான விடயங்களைப் பார்த்தேன். மொட்டுக் கட்சியினரின் கூற்றுப்படி, பிள்ளையான் தான் போரை வென்றுள்ளார். ஆனால் பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனது தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.

சூரியவெவ பிரதேச சபை சந்தை வரியை அறவிடுவதாகக் கூறப்படுகிறது. வரிகள் அறவிடப்படுமானால், அவை மீளவும் மக்களுக்கு ஒரு சேவையாகவோ அல்லது வசதியாகவோ வழங்கப்பட வேண்டும். இந்த முறை வரிக் கொள்கையை மீறுவதாகும். வரி அறவிட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வேறு ஒருவர் பணத்தை அறவிடுகிறார். அறவிடப்படும் வரிகளைக் கொண்டு சந்தை பராமரிக்கப்படுமானால், சந்தை சிறந்த நிலையில் இருக்க வேண்டும்.

சூரியவெவ பிரதேச சபையின் வருமானம் 110 மில்லியன் ரூபாவாகும். அந்தப் பணத்தை பிரதேச சபைக்கே செலவிட்டிருந்தால், இன்று அது சிறந்த நிலையில் இருந்திருக்கும். அப்படி இல்லையென்றால், அந்தப் பணம் யாரோ ஒருவரின் கைகளுக்குச் சென்றுவிட்டது.

பாடசாலைகள் பணம் அறவிடக்கூடாது என்று கூறப்பட்டாலும், அது இன்னும் நடப்பதாக எங்களுக்கு முறைப்பாடுகள் வருகின்றன. விரைவில் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரிக்க அமைச்சில் போதுமான விசாரணை அதிகாரிகள் இல்லை. நாங்கள் இப்போது அந்த விசாரணைப் பிரிவை பலப்படுத்தி வருகிறோம்.

நாங்கள் நிறைவேற்றிய வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்காக அதிக அளவு பணத்தை ஒதுக்கியுள்ளோம். கிராமத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கிராமத்தை சுத்தம் செய்தல்.

அரசாங்கம் இப்போது பொருளாதாரத்தை ஒரு ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. அது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். இதை வருவாயை அதிகரிக்கும் ஒரு நிலைக்கு நாம் கொண்டு வர வேண்டும்.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். சித்தியடையாக சில பிள்ளைகள் ஏற்கனவே இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக பரீட்சை எழுதத் தயாராகி வருகின்றனர், அதே நேரத்தில் மற்றும் சிலர் தொழில் திறன்களைப் பெறுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் சில பிள்ளைகளுக்கு என்ன செய்வது என்ற தெளிவான நோக்கம் எதுவும் அவர்களிடம் இல்லை. ஏனென்றால் இந்தக் கல்வி முறை அந்த பிள்ளைகளுக்கு ஒரு பாதையை வகுத்துத் தரவில்லை. நாங்கள் எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிட்டுள்ள எங்கள் புதிய திட்டத்தில், அனைத்து பிள்ளைகளுக்கும் சரியான வழிகாட்டுதலை வழங்கும் ஒரு முறைமையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நாங்கள் அதை 2026 இல் ஆரம்பிப்போம்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆகிறது என்றும், எதிர்காலத்தில் இவை அனைத்தையும் சரிசெய்ய அரசாங்கம் பாடுபடும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாலிய சந்தருவன் மற்றும் அதுல வெலந்தகொட உட்பட ஏராளமான வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

வரலாற்றில் முதல் முறையாக, புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கண்டி பள்ளிவாயல்கள் திறக்கப்பட்டன - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரலாற்றில் முதல்முறையாக கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இலங்கையர்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

குருணாகலை, பரகஹதெனிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

இந்த நாடு மாறி வருகிறது, அதற்கேற்ப நாம் புதிய வழியில் செயற்பட வேண்டும். நாம் ஒரு புதிய வழியில் செயற்பட வேண்டும் என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். எமது அமைச்சுகளிலும் இதைக் காண்கிறோம். இப்போதெல்லாம், சில நேரங்களில் நான் பெரும்பாலும் மாலை 5 மணிக்குப் பின்னர் அமைச்சுக்குச் செல்கிறேன்,. அவ்வாறு சென்று கலந்துரையாடல் செய்ய முடியுமா என்று கேட்கும்போது, அதிகாரிகள் பரவாயில்லை, நேரம் ஒரு பிரச்சினையாக இல்லை என்றும் கூறுகின்றனர். இன்று, அரச அதிகாரிகள் இரவாகும் வரை வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். இரவு ஒன்பது அல்லது பத்து மணி வரை வேலை செய்யத் தயாராக உள்ளனர். அதிகாரிகள் இப்போது பயமின்றி வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்த நாட்களில் புனித தந்தத்தை வழிபடுவதற்கான யாத்திரை நடைபெறுகிறது. அங்கிருந்த மக்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்று பாருங்கள். குறிப்பாக, வரலாற்றில் முதல் முறையாக, கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் இரவு முழுவதும் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறந்திருந்தன,. நித்திரை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

அங்கு இன அல்லது மதப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. இன்னொரு இனத்திற்கான மரியாதை இருந்தது, இன்னொரு மதத்திற்கான மரியாதை இருந்தது. சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்கள் என்றல்லாது, அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இலங்கை அரசாங்கம் இருக்கிறது என்ற உணர்வின் காரணமாக இது நடக்கிறது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.

வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்

கடந்த காலங்களில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது முறையாக நடைபெறவில்லை என்றும், எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து, தேவையான திறமையான உத்தியோகத்தர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசாங்கம் செயற்படுகிறது. அந்தத் திட்டங்களை கிராமத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

அரசியலின் உயர் மட்டங்கள் தூய்மைப்படுத்தப்பட்டது போல, கீழ் மட்டமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். எங்கள் போட்டி குழுக்களுக்கு வெவ்வேறு நலன்கள் உள்ளன என்பதையும், இது எதிர்க்கட்சியின் அரசியல் இருப்புக்கான விடயம் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் எங்களுக்கு இருப்பு தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அரசாங்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு எமக்கு ஒரு சரியான நிர்வாக முறைமை இருக்க வேண்டும்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருப்பதைக் கண்டேன். அது எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. பின்னர் சஜித் பிரேமதாச டிசம்பர் மாதத்திற்குள் தான் ஜனாதிபதியாகிவிடுவேன் என்றார். இந்த கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை.

நகைச்சுவையான இத்தகைய கருத்துக்களை நாம் அனுதாபத்துடன் பார்த்து நம் வழியில் செல்ல வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், எமது பயணம் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய எமக்குத் தேவையான குழுவை தெரிவுசெய்து அனுப்புவதுதான்.

ஜனாதிபதி அவர்கள் பதவிக்கு வந்ததிலிருந்து அரசியல் கலாசாரத்தில் நாம் ஏற்படுத்திய மாற்றத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த நாட்டு மக்களுக்கு சுமையாக இல்லாத வகையில் அரசாங்கத்தை நடத்துவதற்கு நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். அரசியல்வாதிகள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ள நாங்கள் அனுமதிப்பதில்லை.

மேலதிக செலவுகள், வீண் விரயம் மற்றும் திருட்டு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இனிமேல் நாம் யாரையும் திருடியதாகக் குற்றம் சாட்ட முடியாது.

தற்போது கண்டிக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். வரலாற்றில் முதல்முறையாக, கண்டிக்குச் சென்று புனித தந்தத்தை வழிபடும் பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முஸ்லிம் மக்கள் பள்ளிவாயல்களையும் வர்த்தகஸ்தாபனங்களையும் திறந்துகொடுத்துள்ளனர். நாட்டு மக்களிடையே அத்தகைய ஐக்கிய உணர்வு எழுந்துள்ளது.

எமது பிள்ளைகளுக்கு அறிவு இருந்தாலும், உலகில் அவர்கள் முன்னேற உதவும் திறன்களையும் மனப்பான்மைகளையும் வளர்ப்பதில் கடுமையான சிக்கல்கள் உள்ளன.

அது மட்டுமல்லாமல், இன்னும் மேலே சென்றால், குறைந்தபட்சம் இந்த கல்வி முறையில் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்கள் முறையாக வளர்க்கப்படவில்லை என்பதுதான் இதன் பொருள், இது ஒரு பெரிய சமூக நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

பாடசாலைகளுக்கு இடையே முரண்பாடு உள்ளது. சிறந்த பாடசாலைகளுக்கும் அவ்வாறல்லாத பாடசாலைகளுக்கும், பிரபலமான பாடசாலைகளுக்கும் பிரபலமற்ற பாடசாலைகளுக்கும் இடையே பெரும் போட்டி நிலவுகிறது. உயர்தரப் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில்லை. அவர்கள் பாடசாலைக்குச் செல்வது தமது பெயரைப் பதிவேட்டில் சேர்த்து, பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு மட்டுமே. ஆண் பிள்ளைகள் வேகமாக கல்வியை பாதியில் இடைநிறுத்தி வருகின்றனர். பாடசாலைகளிலும் பல பிரச்சனைகள் உள்ளன. கல்வி என்பது அறிவை வழங்குவது மட்டுமல்லாமல், சமூகத்திற்குத் தேவையான குணங்களையும் ஆன்மீக வளர்ச்சியையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும்.

இதை மாற்ற நாம் தலையிட வேண்டும். பின்னர், கல்வி மூலம், இந்தப் பொருளாதாரத்திலும் இந்த அபிவிருத்தித் திட்டத்திலும் ஈடுபடக்கூடிய திறன்களைக் கொண்டவர்களை உருவாக்க வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் வழங்கப்படுவது பயிற்சி அல்ல, அது பகிடி வதை போன்ற ஒன்று. தங்குமிட வசதிகள் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை, கற்றல் வசதிகள் இல்லை, பதினைந்து ஆண்டுகளில் பாடத்திட்டம் மாறவில்லை, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்ற கற்பித்தல் விரிவுரையாளர்கள் இல்லை. இதையெல்லாம் நாம் சரிசெய்ய வேண்டும்.

ஜெர்மனியில், ஒரு ஆசிரியர் 9 வருட பயிற்சியின் பின்னரேயே பிள்ளைகளுக்கு கற்பிக்க அனுமதிக்கப்படுகிறார், ஆனால் எமது நாட்டில் என்ன செய்கிறார்கள்? அந்த சூழ்நிலை இல்லாவிட்டாலும், தற்போதைய நிலையிலிருந்து முன்னேறுவதற்குத் தேவையான சூழலை நாம் உருவாக்க வேண்டும். பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் பகிர்வில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கடந்த காலங்களில் ஆசிரியர்கள் முறையாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவில்லை. எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.

பாடசாலைகளில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் பாடசாலைகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். மேலும், பிரிவெனா கல்வியில் பல கடுமையான பிரச்சினைகள் உள்ளன. அது பற்றி சரியாக ஆராய்ந்து, தேவைகளை அடையாளம் காணவும், தேவையான பரிந்துரைகளை உடனடியாக வழங்கவும் ஒரு குழு இப்போது நியமிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பிக்கப்படும். இந்தப் புதிய சீர்திருத்தங்கள் தரம் 1 மற்றும் தரம் 6 க்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது பிரபலமடைவதற்கோ அல்லது வாக்குகளைப் பெறுவதற்கோ செய்யப்படவில்லை, மாறாக நம் நாட்டில் கல்வியை மேம்படுத்தும் உண்மையான நோக்கத்துடன் செய்யப்படுகிறது. கிராமிய மட்டத்தில் இவை அனைத்தையும் செயற்படுத்த களத்தில் தூய்மையான தலைமை மிகவும் முக்கியம். மே 6 ஆம் திகதி தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மகத்தான வெற்றியைத் தருவார்கள் என்று தான் நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்கள் உட்பட பிரதேசவாசிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு