பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

අපේ දරුවන්ට රට ගොඩනැගීමට අවශ්‍ය ශක්තිය, හැකියාව සහ ආකල්ප පවතින බව මට විශ්වාසයි. - අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන හා වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍ය, අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

ඒ වෙනුවෙන් අවශ්‍ය මාර්ග විවර කර දීම තමයි වැඩිහිටි අපේ යුතුකම.

අපේ දරුවන්ට රට ගොඩනැගීමට අවශ්‍ය ශක්තිය, හැකියාව සහ ආකල්ප පවතින බවත්, ඒ වෙනුවෙන් අවශ්‍ය මාර්ග විවර කර දීම වැඩිහිටියන්ගේ යුතුකම බවත් අධ්‍යාපන උසස් අධ්‍යාපන හා වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍ය, අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

"Sri Lanka Skills Expo 2025" ප්‍රදර්ශනයේ සමාරම්භක අවස්ථාවට ඔක්තෝබර් 10 දින සහභාගී වෙමින් අග්‍රාමාත්‍යවරිය මේ බව පැවසුවාය.

ලංකාව තුළ තරුණයින් අතර පවතින රැකියා විරහිතභාවය අඩුකිරීම අරමුණු කරගනිමින් තුන්වන වරටත් මෙම ප්‍රදර්ශනය ඔක්තෝබර් මස 10 සහ 11 දෙදින අරලියගහ මන්දිර ප්‍රධාන ශාලාවේදී පැවැත්වේ. Industry Sector Skills Councils (ISSC) සහ අධ්‍යාපන උසස් අධ්‍යාපන හා වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍යංශය එක්ව මෙම ප්‍රදර්ශනය පවත්වයි.

මෙහිදී වැඩිදුරටත් අදහස් දැක්වූ අග්‍රාමාත්‍යවරිය,

"අපි ආරම්භ කරලා තියෙන අධ්‍යාපනය පරිවර්තනය තුළ මේක සුවිශේෂී අවස්ථාවක්. මෙහිදී අපි බලාපොරොත්තු වෙන්නේ විශේෂයෙන්ම අපේ දරුවන්ට අධ්‍යාපනය තුළ පවතින අවස්ථා පුළුල් කරන්න විතරක් නෙවෙයි එම අවස්ථා හඳුනගන්න ඔබට මාර්ගය විවෘත කරන්න. මෙම අත්දැකීම් අධ්‍යාපනය තුළින් ලබාදීමට තමයි මේ වැඩසටහන් සංවිධානය කරන්නේ.

ඔබට පුළුවන් වෙනවා මේ ප්‍රදර්ශනය තුළ ඔබේ ඉදිරි ගමන් මග තුළ අදහසක් ලබාගන්න. ඔබේ සහ දෙමාපියන්ගේ කැමැත්ත, ඔබේ හැකියාවන් සියල්ලම සලකා බලලා අද ලෝකය තුළ නිර්මාණය වන අවස්ථා ගැන දැනුවත් වෙන්න හොඳම අවස්ථාවක් කියල මම හිතනවා.

ඇත්තටම මේ කාලය තුළ අධ්‍යාපනය ලබා සමාජයට ඇතුල් වෙන්න ඉන්න ඔබේ පරම්පරාවට අභියෝග ගණනාවක් තියෙනවා. තාක්ෂණය නිසා ලෝකය ඉතාමත් සීඝ්‍රයෙන් වෙනස් වෙනවා. විශේෂයෙන්ම අපි කාටවත් හිතා ගන්න බැරි විදිහට සමාජය වෙනස් වෙනකොට ඒ වෙනස් වෙන සමාජය තුළ වෘත්තීනුත් වෙනස් වෙනවා. අපි හිතන සාම්ප්‍රදායික ගමන් මගේ ගිහිල්ලා මේ සමාජය තුළ සාර්ථක විදිහට ගමනක් යන්න බැරි වෙනවා. වෙනස් වෙන සමාජය ගැන අපි හොඳ අවබෝධයකින් අපේ අධ්‍යාපන ගමන් මගේ යා යුතුයි.

මේ තුළින් අපේ ජාතික සංවර්ධන සැලැස්මටත් ඔබව එකතු කරගන්න පුළුවන් වෙනවා. අපි ආර්ථිකය දියුණු කරන්න යන ඒ මාවත් මොනවද කියන එක මෙම වැඩසටහන් මගින් ඔබට හඳුන්වා දෙන්න බලාපොරොත්තු වෙනවා. ඒ සංවර්ධන ආර්ථික සැලැස්ම තුළ ඔබට කොතැනටද සම්බන්ධ වෙන්න පුළුවන් කොතනද කොටස්කරුවෙක් වෙන්න පුළුවන් කුමන මගකින්ද කියන එක ගැන ඔබට පමණක් නොවේ ඔබේ ගුරුවරුන්‍ට, දෙමාපියන්ටත් අවබෝධයක් ලබාගන්න පුළුවන්.

මෙම ප්‍රදර්ශනය අතිශයින්ම වැදගත් දෙයක්. මේ තුළින් ඔබට අලුත් ලෝකයක් , සමාජයක් විවෘත වෙනවා. ලෝකය තුළ ඇතිවන නව ප්‍රවණතා මොනවද කියල දැනගන්න පුළුවන් වෙනවා. ඔබ හිතනවට වඩා සමාජය තුළ ඔබට අවස්ථා තියෙනවා ඔබට තැනක් තියෙනවා. ඔබ එනකං අපි බලාගෙන ඉන්නේ. මේ අවස්ථාව භාර අරගෙන ඒවත් එක්ක ඉදිරියට යන්න. ඔබ ඉදිරියට යන ගමන තුළ රටක් දියුණු කරන්න තමයි අපි බලාපොරොත්තු වෙන්නේ. අපේ පැත්තෙන් අපිට කරන්න පුළුවන් ඔබට මේ අවස්ථාව ලබා දෙන එක සහ අලුත් අවස්ථාවන්ට පාර කපලා දෙන එක. ඒ අවස්ථා අරගෙන ඉදිරියට යන එක තමයි ඔබට කරන්න තියෙන්නේ.

මට විශ්වාසයි මෙතන ඉන්න දූ දරුවන්ට සමාජය ගොඩනගන්න අවශ්‍ය ශක්තිය, හැකියාව සහ ආකල්පය තියෙනවා. ඔබ තමා ඊළඟ පරම්පරාවේ නායකත්වය ලබා ලබාගන්න ඉන්නේ. මං හිතන්නේ ඒක ඔබට හැමෝම කියන දෙයක්. නමුත් අපි කියනවා විතරක් නෙවෙයි ඒ අවස්ථා ඒ නායකත්වය ලබාගන්න පුළුවන් අධ්‍යාපන පසුබිමකුත් සමාජය තුළ ඒ ආර්ථික දියුණුවත් අපි ලබා ලබාදෙන්න අවශ්‍ය මාර්ග ඔබ වෙනුවෙන් විවර කරනවා. වැඩිහිටියන් හැටියට අපිට වගකීමක් තියෙනවා ඒක අපි ඔබට කොහොම හරි කරලා දෙනවා. එම අවස්ථාව ප්‍රයෝජනයට අරගෙන ඔබ මේ රට ඉදිරියටම ගෙනියන්න කියන ආරාධනය කරනවා. යැයි අග්‍රාමාත්‍යවරිය පැවසුවාය.

මෙම අවස්ථාවට කර්මාන්ත සහ ව්‍යවසායකත්ව සංවර්ධන අමාත්‍ය සුනිල් හඳුන්නෙත්ති මහතා, නියෝජ්‍ය අමාත්‍ය චතුරංග අබේසිංහ මහතා, වෘත්තීය අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍ය නලින් හේවගේ මහතා,කම්කරු නියෝජ්‍ය අමාත්‍ය මහින්ද ජයසිංහ මහතා, අග්‍රාමාත්‍ය ලේකම් ප්‍රදීප් සපුතන්ත්‍රී මහතා, අධ්‍යාපන අමාත්‍යංශ ලේකම් නාලක කලුවැව මහතා ඇතුළු පිරිසක් සහභාගී වූහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

உத்தியோகத்தர்கள் உட்பட அனைவரும் போக்குவரத்துச் சேவையை மக்களுக்கு ஓர் உணர்வுப்பூர்வமான துறையாக அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் உட்பட அத் துறை சார்ந்த அனைவரும், மக்களுக்கு உணர்வுபூர்வமான போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துடன் தொடர்புடைய போக்குவரத்து அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவு குறித்த விவாதத்தில் இன்று (ஒக்டோபர் 08) பாராளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் உரையாற்றிய பிரதமர்:

"குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவானது ஒரு அமைச்சின் வெளிப்படைத்தன்மைக்கும், பணக் கட்டுப்பாடுக்கும் ஓர் நல்ல எடுத்துக்காட்டாகும். வருட இறுதியில் ஏதேனும் ஒரு திட்டத்தைச் செய்வதற்குத் தடைகள் ஏற்படும்போது, குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவு மூலம் இவ்வாறான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவது ஒரு சிறந்த உதாரணமாகும்."

"இதற்கு முன்னர் விடயங்கள் நடந்தேறிய விதம் நமக்கு நினைவிருக்கின்றது. வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. போக்குவரத்து அமைச்சு என்பதை மோசடி, ஊழல் அதிகமாகக் காணப்படும் ஓர் அமைச்சாகவே சமூகத்தால் இனம் காணப்பட்டிருந்தது. ஆயினும், தற்போது இந்த மனநிலை மாற்றம் கண்டுள்ளதோடு, அந்த ஊழல் மோசடிகளுக்கு எதிராக மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சின் பொதுப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமான இரு துறைகளாகும்."

"மக்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை வசதிகளை வழங்கும் இந்த அமைச்சு, தற்போது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு, மக்களின் தேவைகளுக்காகச் செயற்படும் நிறுவனங்களாக மாறி வருகின்றன. போக்குவரத்து அமைச்சின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடிச் செல்லும் பயணம் பாராட்டத்தக்கது என நான் நினைக்கிறேன். இந்த குறைநிரப்பு மதிப்பீட்டு முன்மொழிவின் மூலம், இந்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினை மேலும் மக்கள் மையப்படுத்தியதாகவும், மக்களுக்காகச் சேவை செய்யும் திறமையான நிறுவனமாகவும் மாற்ற ஒரு நல்ல வாய்ப்பாக நான் இதைப் பார்க்கிறேன்."

"பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவதற்குப் பிரதான காரணங்களில் ஒன்று பண முகாமைத்துவத்தில் இருந்த பலவீனமே என்பதை நாம் அறிவோம். திட்டங்களைக் கண்டறிவதிலும், அத்திட்டங்களில் இருந்த நிபந்தனைகளில் காணப்பட்ட பலவீனத்தினாலேயே நாம் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆகையினாலே, இந்தத் தாக்கம் நமக்கு மிகவும் முக்கியமான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் போன்ற துறைகளிலும் காணப்படுகிறது."

"கடந்த காலம் முழுவதும், மோசமான முறையில் சிந்தித்து பலவீனமான திட்டங்களை ஆரம்பித்தமையையும், அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களில் இருந்த பலவீனங்களையுமே காண முடிந்தது. நாட்டின் மக்களைப் பற்றியோ, நாட்டின் பண முகாமைத்துவம் பற்றியோ சிந்திக்காது எடுக்கப்பட்ட முடிவுகள், முற்றிலும் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அல்லது ஊழல், மோசடியை அடிப்படையாகக் கொண்டோ எடுக்கப்பட்டதால், அந்தத் திட்டங்கள் முன்னோக்கிச் செல்லவுமில்லை, செயற்படுத்தப்படவுமில்லை."

"அத்தகைய பல பிரச்சினைகளை இந்த அமைச்சில் மாத்திரமன்றி, ஒவ்வொரு அமைச்சிலும் நாம் கண்டோம் என நினைக்கிறேன். இந்த ஆண்டு முழுவதும் பாதியில் கைவிடப்பட்ட திட்டங்கள், நிறுத்தப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றுக்காக மீண்டும் நிதி ஒதுக்குவது மாத்திரமன்றி, அவற்றை முடிவுக்குக் கொண்டு வரவும், எப்படியாவது முடிக்கவும் வேண்டியிருந்தது. இவை அனைத்தும் இந்தப் பொருளாதார நெருக்கடியின் மற்றுமொரு பக்கமாகும்."

"இவ்வாறான பல காரணிகளை இந்தத் திட்டங்களில் நாம் காண்கிறோம். எனவேதான், குறைநிரப்பு மதிப்பீடு மூலம் மீண்டும் மீட்க முடியாத, முடிக்க முடியாத வேலைகளைத் தொடர வேண்டியுள்ளது. இந்த நாட்டிற்கும், இந்த நாட்டு மக்களுக்கும் குறைந்தபட்ச இழப்பை ஏற்படுத்தும் வகையில் இவற்றை முடிக்கவே நாம் இந்த முயற்சியை எடுக்கிறோம்."

"பொதுப் போக்குவரத்து நமக்கு மிகவும் முக்கியமானது. மக்கள் பாதுகாப்பாக, விரைவாகவும், வசதியாகவும் தமது பயணங்களை மேற்கொள்ள முடிவது மிகவும் அவசியமானதாகும். அதேபோல், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் போக்குவரத்து வசதிகளைப் பெறக்கூடிய வகையிலும், பொதுப் போக்குவரத்தை அணுகக்கூடிய வகையிலும் இவற்றை மேம்படுத்துவது மிகவும் அத்தியாவசியமானதாகும்."

"இதற்காக இந்த அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் மிகவும் பாராட்டுகிறோம். கல்வி அமைச்சு ஊடாக நாம் போக்குவரத்து அமைச்சுக்கு ஒரு யோசனையை முன்மொழிந்திருக்கின்றோம். பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது என்பது ஒரு கட்டிடத்தைக் கட்டுவது மாத்திரமல்ல. அந்தப் பாடசாலையைச் சென்றடையும் வீதியை மேம்படுத்துவது, அந்தப் பாடசாலைக்குச் செல்வதற்கான பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவது, அந்தப் பொதுப் போக்குவரத்துச் சேவையின் தரத்தை உறுதிப்படுத்துவது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இவை அனைத்தையும் பாடசாலை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாகவே நாம் காண்கிறோம்."

"எனவே, போக்குவரத்து அமைச்சியுடன் இந்தக் கலந்துரையாடலை ஏற்படுத்த முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாம் பல யோசனைகளை முன்மொழிந்திருக்கின்றோம். குறிப்பாக, தூரப்பிரதேசங்கள், கிராமப்புறப் பாடசாலைகள் ஆகியவற்றுக்கான வீதிகள் நேர்த்தியாக இல்லை. அந்தப் பிரதேசங்களில் வசிக்கும் சிறுவர்களின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் இவை மேம்படுத்தப்பட வேண்டும்."

"பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் நாம் கலந்துரையாடி வருகிறோம். சிறுவர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வசதிகளில் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும். முன்பெல்லாம், குழந்தைகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட நடத்துநர் மற்றும் சாரதிகளின் தரம் இருந்ததை நாம் அறிவோம். அவர்கள் வீதியில் பேருந்தைச் செலுத்திச் செல்லுவதோடு நின்றுவிடாது. அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்பும் மனப்பான்மையும் கொண்டிருந்தார்கள்."

"அந்த மனப்பான்மை மாற்றமும் இந்த நேரத்தில் நமக்கு மீண்டும் தேவைப்படுகிறது. தமது பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்காகக் காட்டும் அந்தப் பொறுப்புணர்வும், அர்ப்பணிப்பும் அந்த மனப்பான்மை மாற்றமும் நமக்குத் தேவைப்படுகின்றது. எனவே, இந்த நேரத்தில் போக்குவரத்து அமைச்சு அந்த மனப்பான்மையை மேம்படுத்த ஒரு நல்ல முயற்சியை மேற்கொள்வதைக் காண்கிறோம்."

"மாற்றுத்திறனாளிகள் சமூகம், எமது முதியோர்கள் ஆகியோருக்குப் பேருந்துகளில் மாத்திரமின்றி, எமது ரயில் நிலையங்களில், எமது ரயில்களில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். பயணிகளின் சுகாதார வசதிகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும்," என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

எந்தவொரு குறிப்பிட்ட குழுவினருக்கும் விசேட சலுகையையோ அல்லது விசேட ஊக்குவித்தலையோ பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம்

அரசாங்கம் எந்தவொரு குறிப்பிட்ட குழுவினருக்கும் விசேட சலுகையையோ அல்லது விசேட ஊக்குவித்தலையோ பெற்றுக் கொடுக்காது என்றும், சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இன்று (ஒக்டோபர் 08) பாராளுமன்ற விவாதத்தின்போது LGBTQ+ குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த வேண்டாம். அத்தகைய விடயங்களை முன்வைக்கும்போது நாம் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். இதனால் சிரமப்படும் ஒரு சமூகம் இருக்கவே செய்கிறது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகத் தெளிவானதாகும், நாம் எந்தவொரு குழுவிற்கும் விசேட சலுகையோ அல்லது விசேட ஊக்குவித்தலையோ பெற்றுக் கொடுக்கப்போவதில்லை, எனத் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,

சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துக் கௌரவ நீதி அமைச்சரும் அமைச்சும் ஆராய்ந்து வருகின்றன. அத்தோடு, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குழந்தைகள் இத்தகைய இடங்களில் இருப்பதைத் தடுக்க வேண்டுமாயின், நீதித்துறைச் செயல்முறையை மாற்றி அமைக்க வேண்டும், என கூறினார்.

கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், பிரதமர் பின்வருமாறு தெரிவித்தார்:

கல்வியியற் கல்லூரிகள் நீண்ட காலமாகப் புனரமைக்கப்படவில்லை. வளங்கள் மாத்திரமன்றி, அவை செயற்படும் விதம் குறித்தும் பெரிதாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

இந்த ஆண்டில், காலத்திற்குப் பொருத்தமான அதே வேளை, உத்தேசக் கல்விச் சீர்திருத்தங்களுக்கும் பொருத்தமான வகையில் ஒரு பாடத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். நமக்குத் தேவையான ஆசிரியர்களை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக, கல்வியியற் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிபுணத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்து வருகின்றோம்," என்றார்.

எமது அரசாங்கத்தின் இலக்கு, அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற நிலையை அடைவதே ஆகும். கல்வியியற் கல்லூரிகளை பட்டத்தை வழங்கும் நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே எமது இலக்காகும். ஏற்கனவே குலியாப்பிட்டிய கல்வியியற் கல்லூரிகளில் பட்டம் வழங்கப்படுவதாகவும், எஞ்சியிருக்கும் 19 கல்வியியற் கல்லூரிகளையும் அந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் தொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் தொழில்நுட்பத் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒக்டோபர் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, இலங்கையில் முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதுடன், தேர்தல் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் நிறுவனங்களின் சட்ட மற்றும் செயல்பாட்டுக் கட்டமைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தேர்தல் ஆணைக்குழு உட்படப் பிரதான தேர்தல் நிறுவனங்களின் ஆற்றல் மற்றும் தயார்நிலை பற்றிய புரிதலைப் பெறுதல், அத்துடன் அரசியல் பங்குதாரர்களின் ஈடுபாடு ஆகியன குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் தொழில்நுட்பத் தேர்தல் தேவைகள் மதிப்பீட்டுக் குழுவின் பிரதிநிதிகள், இலங்கையில் தற்போதுள்ள தேர்தல் வழிமுறைகளை கவனத்தில் கொண்டு, தேர்தல் செயல்பாட்டின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் எதிர்கொள்ள நேரிடுகின்ற சவால்களுக்குத் தீர்வுகளைத் தேடுவதற்குத் தமது ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். பெண்கள் மற்றும் ஏனைய சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், தேர்தல் நடவடிக்கைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தேர்தல் செயற்பாட்டில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு, அவர்களை வேட்பாளர்களாக மாத்திரம் அன்றி, செயலூக்கமிக்க வாக்காளர்களாகவும் செயல்பட, ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். அத்தோடு, சுதந்திரமான, நீதியான அதேவேளையில் அரசியலமைப்புக்கு அமைவான தேர்தல்களை நடத்துவதற்கு, வன்முறை, ஊழல் மற்றும் அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் உதவிப் பிரிவின் பணிப்பாளர் (DPPA) Michele Griffin, தேர்தல் கொள்கை நிபுணர் Dan Malinovich, அரசியல் அலுவல்கள் அதிகாரி (ஆசியா - பசிபிக் பிரிவு) (DPPA-DPO) திருமதி. Amanda Stark மற்றும் அரசியல்/தேர்தல் அலுவல்கள் அதிகாரி Mikyong Kim ஆகியோர் உட்பட ஐக்கிய நாடுகள் சபை தலைமையக மற்றும் UNDP இன் இலங்கைக்கான சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஆர்.எம்.ஐ.டி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டு ஆய்வுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

இன்று, அக்டோபர் 02, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற ஆர்.எம்.ஐ.டி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டு ஆய்வுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பங்கேற்றார்.

இலங்கையின் இளம் கல்வியாளர்களின் அறிவைப் பாலப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குதல் ஆகிய துறைகளில் கலாநிதி பட்டப் படிப்பிற்கான பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி (RMIT) பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் (UGC) இடையேயான கூட்டு மதிப்பு வடிவமைப்பாக இந்த உத்தியோகபூர்வ விழா அமைந்தது. இத்திட்டம் பேராதனைப் பல்கலைக்கழகம், மொரட்டுவப் பல்கலைக்கழகம், ருஹுணுப் பல்கலைக்கழகம் மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கலாநிதிப் பயிற்சிக்காக 30 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் அவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் திறனை வலுவூட்டுவதில் ஆர்.எம்.ஐ.டி உடனான இந்த கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். மேலும், நாடு தற்போது இனம் கண்டிருக்கும் முக்கிய துறைகளைத் திறம்படக் கையாள்வதற்கு ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் தீவிர பங்களிப்பு அரசாங்கத்திற்குத் தேவைப்படுகின்றது என்பதையும் வலியுறுத்தினார்.

அத்தோடு, சம்பிரதாய அணுகுமுறைகளுக்கு அப்பால், அதிகமான பல்துறையசார் மற்றும் பல்வகைப்பட்ட உத்திகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், நிலையான அதே நேரம் அனைவரையும் உள்வாங்கிய அபிவிருத்தியை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்லும் தலைமைப் பொறுப்பை இன்று புலமைப்பரிசில்களைப் பெற்ற கல்வியாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஆஸ்திரேலியாவின் பதில் உயர்ஸ்தானிகர் Lalita Kapur, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர், ஆர்.எம்.ஐ.டி பிரதிநிதிகள், பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள், உபவேந்தர்கள், பீடாதிபதிகள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

காலநிலை நடவடிக்கை கருத்தரங்கு 2025 நிறைவு விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்பு

கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்ற காலநிலை நடவடிக்கை கருத்தரங்கின் நிறைவு விழா 2025 இல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 1ஆம் திகதி கலந்துகொண்டார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இக் காலநிலை நடவடிக்கை கருத்தரங்கானது (CAS 2025), விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அனுசரணையில், காலநிலை-நெகிழ்தன்மை ஒருங்கமைக்கப்பட்ட நீர் மேலாண்மை திட்டம் (CRIWMP) மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியன இணைந்து நடத்தியது.

"வெவ்கம் புபுதுவ" எனும் ஏழு வருடத் திட்டமானது, பசுமை காலநிலை நிதியத்தின் ஆதரவுடன், ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய வறண்ட வலயத்தைச் சேர்ந்த சிறுபோக விவசாயிகளின், காலநிலை மாற்றம் மற்றும் கடுமையான நிலைமைகளுக்குத் தாக்குப் பிடிக்கின்ற சக்தியைப் பெற்றுக் கொடுப்பதை நோக்காகக் கொண்டதாகும். CAS 2025 இன் தொனிப்பொருள், "காலநிலை மாற்றங்களைத் தாக்குப்பிடிப்பதற்கான ஒருங்கிணைந்த வள முகாமைத்துவம், சமூகங்களை மாற்றுதல் மற்றும் கொள்கைகளை வடிவமைத்தல்" என்பதாகும்.

இந்தக் கருத்தரங்கு, இலங்கை முழுவதிலும் உள்ள விவசாயம் (பயிர்கள், கால்நடைகள், கோழி வளர்ப்பு, மீன்வளர்ப்பு), குடிநீர், வானிலை, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து, நீர் மற்றும் காலநிலை ஆகியவற்றுக்குத் தாக்குப் பிடிக்கும் திறன் அபிவிருத்தி மற்றும் கல்வித் தகைமைகளை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டுத் தளத்தை உருவாக்கி இருக்கின்றது.

பேராதனைப் பல்கலைக்கழக கல்விமான்களின் பங்களிப்புடன், காலநிலைக்கு முகம் கொடுப்பதற்கான ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத் திட்டத்தின் (CRIWMP) மூலம் கண்டறியப்பட்ட முக்கியமான கற்கைகள், மற்றும் ஆய்வுகள் பற்றிய கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அபிவிருத்திப் பயிற்சியாளர்களுக்கு நேரடியான தொடர்புகளை வெளிப்படுத்தவும், பிரசுரிக்கவும் இது ஒரு சரியான வாய்ப்பை வழங்கியது.

இந்நிகழ்வில் முக்கிய உரையை ஆற்றிய பிரதமர், புதிய தேசிய காலநிலை நிதிக் கேந்திரோபாயத்தின் 2025–2030 கீழ் காலநிலை நிதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, கிராமப்புற அபிவிருத்தி, காலநிலை சார்ந்த மதிநுட்பம் மிக்க விவசாயம், சுற்றுச்சூழல் மீளமைப்பு, அனர்த்த முன்னேற்பாடு மற்றும் பசுமை வளர்ச்சி உள்ளிட்ட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளை அவர் கோடிட்டுக் காட்டினார். இக்கருத்தரங்கின் நுண்ணறிவுகளைத் தேசியக் கொள்கைகள் மற்றும் சமூக மட்டத் தீர்வுகளாக மாற்றி அமைப்பதற்கான கூட்டு நடவடிக்கைக்குப் பிரதமர் அழைப்பு விடுத்ததோடு, இலங்கையின் முயற்சிகள் உலகளாவிய காலநிலை தாங்குதிறனுக்கான ஒரு முன் மாதிரியாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் திரு. சுசில் ரணசிங்க, ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி திருமதி. Asuza Kubota, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சப்புதந்திரி, தேசியத் திட்டப் பணிப்பாளர் திரு. சந்தன எதிரிசூரிய, உத்தியோகத்தர்கள், கல்விமான்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு