உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (2024.04.24) மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

அமைச்சர்களான அலி சப்ரி, மஹிந்த அமரவீர, ஆளுநர்களான விலீ கமகே, செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, வெளிவிவகார திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு