தென் கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, இன்று (2024.04.03) அந்நாட்டில் தடுப்பூசி மற்றும் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் உலகளாவிய நிறுவன பங்காளியான எஸ்.கே. பயோடெக் (SK Biotech) ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, அனூப பஸ்குவல் பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, ராஜிகா விக்கிரமசிங்க, முதிதா டி சொய்சா, ஜகத் குமார, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு