சீனா - இலங்கை ஒத்துழைப்பில் 9 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (2024.03.26) சீனப் பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

தியனன்மென் சதுக்கத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு பிரதமர் இன்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சீன இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதன் பின்னர், பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹாலில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில், பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலதிகமாக, சமூக, கலாச்சார, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் உருவாக்கப்படும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தினர்.

இலங்கையின் சார்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும், சீனா சார்பில் ஒன்பது அமைச்சுக்களின் செயலாளர்களும் கைச்சாத்திட்டனர்.

இந்த நிகழ்வில் சீன மக்கள் குடியரசின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு