இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 37வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்திக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 22 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
பிரதமர் ஊடகப் பிரிவு