இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ் 2025 ஆகஸ்ட் 11 ஆந் திகதி இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
உயர் ஸ்தானிகரின் பதவிக் காலத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டிய பிரதமர், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது வெளிப்படைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு குறித்து விசேடமாகக் குறிப்பிட்டார். கனடாவின் கல்வி முறை குறித்து பிரதமருக்கு விளக்கமளித்த உயர் ஸ்தானிகர், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.
கனேடிய தூதுக்குழுவில் இலங்கையில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் Gwen Temmel மற்றும் உயர் ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் பேட்ரிக் பிக்கரிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் திருமதி பிரமுதிதா மனுசிங்க ஆகியோர் இந்தக் சந்திப்பில் பங்கேற்றனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு