பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

Steps are to be taken to develop the Tourism Industry by enhancing the Capacity of Local Tourism Service Providers. - Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya stated that the government is working towards a tourism development initiative aimed at promoting tourism at rural level by strengthening the capacity of local tourism service providers.

The Prime Minister made these remarks while participating in the inaugural ceremony of the China–Sri Lanka–Maldives Tourism Forum, held on June 16 at the Cinnamon Life Hotel in Colombo, under the theme "Connectivity and Collaborative Success along the Silk Road."

Addressing the event, the Prime Minister Dr. Harini Amarasuriya further stated:

The primary vision of this forum is not only to boost economic growth through the tourism industry but also to foster the connection and ng people, cultural understanding, and regional cooperation within South Asia.

China continues to attract millions of tourists with its vast and diverse landscapes, centuries-old heritage sites, and distinctly modern cities.

The Maldives represents idyllic islands with pristine coral reefs, crystal-clear waters, and world-renowned luxury resorts.

Sri Lanka, offers a unique blend of experiences from the sacred city of Anuradhapura to the Sigiriya Rock Fortress, from the golden southern coastline to the mist-covered tea plantations of the central highlands.

The government is currently focused on building a tourism industry that not only focuses on generating income but also protects our ecosystems, values our cultural heritage, and empowers our communities.

In this regard, regional cooperation is of vital importance to Sri Lanka. This forum creates the path for streamline visa processes, align health and safety standards, develop integrated marketing strategies, and attract international investments.

Our aim is to transform the tourism sector into one that reaches rural communities, supports women entrepreneurs, and encourages youth participation.

The government is already taking measures to promote eco-tourism, enhance digital tourism infrastructure, and strengthen the capacity of local tourism service providers.

Particularly, attention has also been directed toward establishing a community-based tourism model that ensures tourism benefits reach underrepresented regions of the country.

Collaborating with the innovations of China presents an opportunity to elevate the tourism industry to new heights in Sri Lanka.

It is important to remember that the true value of the tourism industry lies not only in its economic returns but also in its ability to nurture human connections. It provides the power to dismantle uniform perspectives, foster empathy, and build peace. In a divided world, tourism opens pathways to unite across borders, cultures, and generations.

The event was attended by the heads of the Chinese and Maldivian diplomatic missions in Sri Lanka, along with a delegation from the Chinese Ministry of Culture and Tourism, and other distinguished guests.

Prime Minister’s Media Division

பிரதமரின் பங்கேற்புடன் உலக இரத்த தான தேசிய நிகழ்வு

ஜூன் 14 ஆம் திகதி இடம்பெறும் உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு, ஜூன் 14 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றதுடன், அதனுடன் இணைந்ததாக இரத்த தானம் செய்பவர்களுக்கான பாராட்டு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

"வாழ்க்கைக்கு நம்பிக்கையை கொடுப்போம், இரத்த தானத்திற்காக ஒன்றுபடுவோம்" என்பது உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளாகும். நாட்டின் வருடாந்த இரத்தத் தேவையில் சுமார் 85% நடமாடும் இரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்களினால் செய்யப்படும் ஒப்பற்ற பங்களிப்பாகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

தேசிய இரத்தமாற்ற சேவைக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் 450,000 இரத்த அலகுகளில், 380,000 க்கும் மேற்பட்டவை அல்லது சுமார் 85% இந்த நடமாடும் முகாம்களிலிருந்து சேகரிக்கப்படுகின்றன, இந்த நோக்கத்திற்காக ஆண்டுதோறும் சுமார் 5,000 நடமாடும் இரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இந்த பாராட்டு நிகழ்வில் சுமார் 1,500 இரத்த தானம் செய்பவர்களும் 1,000 இரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்களும் பங்கேற்கிறார்கள்.

இனம், மதம், மாகாணம் அல்லது பிரதேசம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வணிக நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பாடசாலைகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் தனிநபர்கள் உட்பட பல்வேறு வகையான பங்களிப்பாளர்கள் இங்கு விருதுகளைப் பெறுகிறார்கள்.

இந்த ஏற்பாட்டாளர்கள், எந்தவொரு தனிப்பட்ட நன்மையையும் எதிர்பார்க்காமல், தங்கள் செல்வம், உழைப்பு மற்றும் நேரத்தை இந்த நோக்கத்திற்காக தானாக முன்வந்து அர்ப்பணிக்கும் பிரிவினராகும். இலங்கையில் உள்ள இந்த தனித்துவமான இரத்த தான முறைமை உலகின் வேறு நாடுகளில் காணக் கிடைப்பதில்லை.

அரச நிறுவனங்களுக்கு இரத்த தானம் செய்வதற்காக வருடத்திற்கு ஒரு நாளை ஒதுக்கும் திட்டத்தை எதிர்காலத்தில் ஒரு முறையான திட்டத்துடன் மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

பாடசாலை முறைமையினுள்ளும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எதிர்கால இரத்த தானம் செய்பவர்கள் உருவாகும் இடமாக பாடசாலை முறைமை இருப்பதால் இது மிகவும் முக்கியமானது.

இரத்த தானம் செய்பவர்கள் கோவிட் தொற்றுநோய் போன்ற சிரமங்களுக்கு மத்தியிலும், அவர்கள் தங்கள் பொறுப்புகளை மறக்காமல் தங்கள் தேசியப் பொறுப்பை நிறைவேற்றினர். இன்று இலங்கை தன்னார்வ இரத்த தானம் மூலம் 100% இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாடாக மாறியுள்ளது என்றும், அவர்களின் உன்னத பணிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடக அமைச்சர், வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,

நாட்டின் சுகாதாரத் துறையில் இரண்டு முன்னணி துறைகளான, நோய் நிவாரண ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு சேவை மற்றும் தேசிய இரத்த மாற்று சேவை ஆகியவை சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளன. 2010 ஆம் ஆண்டு உலக சுகாதார தாபனம், ஒவ்வொரு நாடும் 2020 ஆம் ஆண்டுக்குள் தன்னார்வ இரத்த தானங்கள் மூலம் 100% இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது, மேலும் இலங்கை ஏற்கனவே 2014 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைந்துவிட்டது. இதுவரை, உலகம் முழுவதும் 70 நாடுகள் மட்டுமே இந்த நிலையை அடைந்துள்ளன.

இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் முக்கிய இயக்குனர்கள் நாட்டின் இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் இரத்த முகாம் ஏற்பாட்டாளர்கள், அவர்கள் "மிகவும் தூய்மையான இதயங்களைக் கொண்ட விசேட குழுவினர்" இரத்தமாற்ற சேவையை மேலும் நவீனமயமாக்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஸ்டெம் செல்கள் (stem cells) மற்றும் இரத்த பிளாஸ்மாவை (blood plasma) தானம் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும், NAT சோதனை (Nucleic Acid Amplification Test) போன்ற நவீன ஆய்வக சோதனைகளை அறிமுகப்படுத்துவதற்கும், அனைத்து இரத்த வங்கிகளிலும் தரக் கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சு செயற்பட்டு வருகிறது. AABB தரநிலைகள் மற்றும் GMP (சிறந்த உற்பத்தி நடைமுறைகள்) போன்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முறைகளை நிறுவுவதன் மூலம் இரத்தமாற்ற சேவைகளை மேலும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தன, தேசிய இரத்தமாற்ற சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் இரத்த தானம் செய்பவர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் 2025 வெள்ளித்திரை விருது விழா

2025 வெள்ளித்திரை (Silver Screen) விருது விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜூன் 13ஆந் திகதி பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

1970-1975 ஆண்டுகளில் சுதேச சினிமாவுக்கு வளம் சேர்த்த கலைஞர்களை பாராட்டுவதே இந்த ஆண்டு விருது விழாவின் நோக்கமாகும் . முன்னணி நடிகை ஐரங்கனி சேரசிங்கவுக்கு சுமித் பிபிலே நினைவு தங்க விருதை பிரதமர் வழங்கி வைத்தார். பத்மஸ்ரீ கொடிகார, தினேஷ் பிரியசாத், இந்திராணி பெரேரா ஆகிய கலைஞர்களுக்கும் பாராட்டு விருதுகளை பிரதமர் வழங்கினார்.

விருது வழங்கும் விழா நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ,

உலகின் மிகவும் ஜனரஞ்சகமான கலை வடிவங்களில் ஒன்றான சினிமாவின் முன்னேற்றத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த சிரேஷ்ட கலைஞர்களைப் பாராட்டுவது, அவர்களை பராமரிப்பது மற்றும் அனைத்துத் தேவையான சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்காக முன்னிற்பது முழு தேசத்தினதும் முழுமையான கடமையாக நான் கருதுகிறேன்.

2025 ஆம் ஆண்டு சுதேச சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வேளையில், சினிமாவின் இடத்தை தரத்திலும், அளவிலும் சிறப்பாக கட்டியெழுப்புவதற்கு பங்களித்த, ஊக்குவித்த மற்றும் தியாகம் செய்த மக்களுக்கு தேசத்தின் கௌரவத்தை வழங்குவது எமது நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விடயமாக நான் உணர்கிறேன்.

சுமித் பிபிலே அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மன்றம், அவரது மகள் சனோஜா பிபிலே அவர்களால் நடத்தப்படுவது பாராட்டத்தக்கது.

பேசும் படங்கள் முதல் 70களின் முற்பகுதி வரை சினிமாவுக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்த பல கலைஞர்கள் ஏற்கனவே வெள்ளித்திரை விருதைப் பெற்றுள்ளனர் என்பதை அறிவது மகிழ்ச்சியளிக்கும் விடயம்.

இந்த நேரத்தில் நாம் மறைந்த நடிகை மாலனி பொன்சேகாவையும் நினைவுகூர வேண்டும். அவர் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். ஆனால் அந்த விருதுகளைப் பார்க்கிலும் மக்களின் அன்பை வென்றிருந்தார்.

சிங்கள சினிமாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த ஆண்டு விருதுகளைப் பெறும் திரைப்பட கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் உட்பட அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், திருமதி சனோஜா பிபிலே, திரு. சுனில் டி. பெர்னாண்டோ மற்றும் சில்வர் ஸ்க்ரீன் அமைப்பின் அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும், இந்த விழாவை வெற்றிகரமாக்க இதுபோன்ற அர்த்தமுள்ள விடயங்களை மக்கள்மயப்படுத்த உதவும் அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கும், கௌரவ ஜனாதிபதி தலைமையிலான முழு அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், இந்தப் பணியை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமருடன் கலாசாரம் மற்றும் புத்த சாசன அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹதிவுல்வெவ, சிரேஷ்ட கலைஞர் ரவீந்திர ரன்தெனிய மற்றும் பல கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பேராசிரியர் ஜே.பி. திசாநாயக்கவை கௌரவிக்கும் வகையில் "உபஹார மஞ்சரி" நூல் சமர்ப்பண விழாவில் பிரதமர் பங்கேற்பு...

சிரேஷ்ட பேராசிரியர் தேசமான்ய ஜே.பி. திசாநாயக்கவை கௌரவிக்கும் வகையில் "உபஹார மஞ்சரி" நூல் சமர்ப்பண விழா ஜூன் 13 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலைக்கூடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பேராசிரியர் ஜே. பி. திசாநாயக்க இந்த நாட்டில் உயர்கல்வித் துறையில் தோன்றிய பல பேராசிரியர்களில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக மதிக்கப்படுவதற்கு, அவரது கல்விச் சேவை பல்கலைக்கழகத்திற்கு மட்டுமன்றி, அதையும் தாண்டி சாதாரண மக்களையும் சென்றடைந்தமையேயாகும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியதெரிவித்தார்.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றிய ஜே.பி. திசாநாயக்கவின் விரிவான இலக்கியப் பணி, நவீன மொழியியல், சிங்கள இலக்கணம், சிங்கள கலாசார ஆய்வுகள் மட்டுமல்லாமல், சிறுவர் இலக்கியத் துறையிலும் ஆராய்ச்சி செய்து புத்தகங்களைத் தொகுத்து வழங்கிய இலக்கியப் பணி ஈடு இணையற்றது. சிறுவர்களின் சிங்கள அறிவையும் சிந்தனையையும் வளர்க்க பெறுமதியான பாடப்புத்தகங்களை எழுதுவதன் மூலம் கிராமியக் கதைகள் மற்றும் இதிகாசக்கதைகளை சிறுவர்களின் உலகத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவரப்பட்ட விதம் அற்புதமானது என்றும் பிரதமர் கூறினார்.

சிங்கள மொழியின் கலைத் தன்மையைப் பாதுகாத்து, அதை முழு மக்களுக்கும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்காக, சிங்கள எழுத்துக்களிலிருந்து இலக்கணம் வரை புதிய கருத்துக்களைக் கொண்டு வந்து, எமது நாடு ஒரு அழகான மொழிக்கு உரிமை கோரும் கீர்த்திமிக்க நாடாக உலகில் பிரகாசிக்க முடியும். இந்த மண்ணில் பிறந்த மக்களுக்கு, நாம் ஒரு அழகான மொழி மற்றும் கலாசாரத்தைக் கொண்ட மக்கள் என்பதைத் தெரிவிப்பதில் ஜே.பி. திசாநாயக்க ஆற்றிய மகத்தான பணிக்கு மிகவும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்தப் பாராட்டு நூலை சமர்ப்பணம் செய்யும் விழாவில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிங்கள கற்கைகள் துறைத் தலைவர் சங்கைக்குரிய அகலகட சிறிசுமண தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக உட்பட பல விசேட அதிதிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நமது நாட்டை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற நாம் பாடுபட வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூன் 13 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை சமையல் கலைஞர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "சமையல் கலை உணவு கண்காட்சி 2025" இன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

உணவு என்பது வெறும் போசனைக்கான ஒரு வழிமுறையாக மட்டுமன்றி, ஒரு நாட்டின் கலாசாரம், அழகான நினைவுகள், சுதேச அடையாளம் மற்றும் உரிமைகளின் சக்திவாய்ந்த வெளிப்பாடாகவும் இருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இலங்கை இயற்கை அழகால் மட்டுமன்றி, சுவையும் படைப்பாற்றலும் சிறந்து விளங்கும் இடமாக நாட்டை நிலைநிறுத்துவதில் சமையல் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

மேலும், CAFE (சமையல் கலை உணவு கண்காட்சி) இலங்கையின் தொழில்முறை சமையல்காரர்கள், பயிலுனர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் போட்டியிடுவதோடு மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், வெளிநாடுகளைச் சேர்ந்த சமையல்காரர்களுடன் உறவுகளை உருவாக்கவும் ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது. இது ஒரு கண்காட்சி என்பதைப் பார்க்கிலும் மேலானது, திறமை, பாரம்பரியம், ஒத்துழைப்பு மற்றும் உணவு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட எல்லையற்ற படைப்பாற்றலின் கொண்டாட்டமாக மாறியுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

இந்த அங்குரார்ப்பண விழாவில் இலங்கை சமையல்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சமையல்கலைஞர் ஜெரார்ட் மெண்டிஸ், நெஸ்லே லங்காவின் தலைவர் பெர்னார்ட் ஸ்டீபன், CDC Events & travels தலைவர் சந்திரா விக்ரமசிங்க மற்றும் House of ASRIEL இன் தலைவர் ஷிரான் பீரிஸ். ஏராளமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணத்துவ சமையல்காரர்கள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

By activating Vocational Training as a Strategy, it can be eradicated the Poverty and Clean the Economic Crisis. - Prime Minister Dr. Harini Amarasuriya

The primary reason why inexperienced labor force refrain from enrolling in vocational training is the lack of appealing environment in the training institutions.

Prime Minister Dr. Harini Amarasuriya stated that the low engagement of inexperienced labor force in vocational training is largely due to the unattractiveness of training institutions and emphasized the need to address and rectify this situation.

The Prime Minister made these remarks while participating in an awareness program held at the Orugodawatta Tech Institute which focused on the upcoming “Shrama Meheyuma” initiative, scheduled to be implemented islandwide on July 4, 2025, utilizing 311 national, district, and regional vocational training centers. This initiative is part of a broader national program aligned with the vision of a Clean Sri Lanka, built upon environmental, social, and ethical principles.

The Prime Minister further stated:

A young person who receives vocational training in a high-demand field will encounter no obstacles in securing a well-paying job, either locally or internationally. However, we continue to witness a lack of participation in vocational training by the unemployed, inexperienced labor force. The lack of attractiveness of training institutions is a significant contributing factor to this issue. Therefore, it is imperative that we implement long-term measures and plans to transform this reality.

Nevertheless, we cannot afford to remain silent. The vocational education sector holds immense potential. It possesses a wide range of technical and professional expertise, as well as the necessary tools and resources. Approximately 125,000 young trainees are currently enrolled in these institutions. As such, a unique opportunity has emerged to launch a large-scale initiative in alignment with the environmental pillar of the Clean Sri Lanka program.

The Prime Minister also highlighted that public institutions and community stakeholders can be engaged in support of this initiative.

Let us commence this national initiative with the inauguration on July 4 and ensure its continued implementation. By undertaking minor maintenance and environmentally friendly approach by excluding major construction or renovations, we can transform our training centers into appealing spaces for youth.

Moreover, it is essential that we cultivate social and ethical transformation within ourselves and within our institutions

If we are able to reduce the proportion of inexperienced labor which currently stands at approximately 72% of the inactive labor force by 25% within the next five years, and if at least one member from each economically vulnerable household can be directed towards vocational training, these households will then have the opportunity to earn a monthly income ranging from LKR 50,000 to 75,000.

Therefore, on July 4, you will not merely be cleaning your vocational training center. Through your actions, you will also be contributing to encouraging youth to engage in vocational training, thereby enabling their families to overcome poverty and helping the country address its economic challenges.

The event was attended by Mr. S.P.C. Sugishwara, Additional Secretary to the President at the Clean Sri Lanka Operations Secretariat, as well as heads of institutions and senior officials from the Vocational Education Division of the Ministry of Education.

Prime Minister’s Media Division