தேசிய முக்கியத்தும்வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தற்கால இளம் தொழில் முயற்சியாளர்கள் செயற்திறன்மிக்க பங்களிப்பினை வழங்க வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தேசிய முக்கியத்தும்வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தற்கால இளம் தொழில் முயற்சியாளர்களின் செயல்திறன்மிக்க பங்கினை வகிக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் (29) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை புத்திஜீவிகள் தொழிற்துறையாளர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தற்போதைய சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களை கௌரவித்தல் மற்றும் 50வது நினைவு முத்திரையை வெளியிடுதல் ஆகிய நிகழ்வுகளும் பிரதமரின் பங்கேற்பில் இடம்பெற்றன.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

இலங்கை தொழில்துறையாளர்கள் அமைப்பு (OPA) இலங்கையின் தொழில்சார் சமூகத்தை ஐக்கியப்படுத்தி அவர்களின் விசேட நிபுணத்துவம், கருத்துக்கள் மற்றும் பங்களிப்பு என்பவற்றிற்கான பலத்த குரலாக மாறுவதற்கு ஐந்து வருடங்களாக மேற்கொண்ட பிரயத்தனங்களை வரவேற்பதாகவும், அதன் பரப்பு மற்றும் விடயதானங்கள் என்பன அதன் விசேடத்துவமாக இருப்பதுடன், 34 தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 52 உறுப்புரிமை சங்கங்களைக் கொண்ட, 60,000 தொழிற்துறையாளர்கள் அங்கத்துவம் வகிக்கும் பிரதான சங்கமாக இலங்கையின் தொழிற்துறையில் OPA விசேட கடமைகளை நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, OPA என்பது வெறுமனே ஒரு அமைப்பு மாத்திரமல்ல,மாறாக தொழில் தரம் மற்றும் தேசிய அபிவிருத்திக்கென பொதுவான அர்ப்பணிப்புகளுடன் கூடிய பல்வேறு துறைகளை இணைக்கும் ஒரு மேடையாகவும் செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பொறியியல் விஞ்ஞானம், வைத்திய விஞ்ஞானம், சட்டம், நகர திட்டமிடல் போன்ற துறைகளைச் சேர்ந்த தொழிற்துறையாளர்கள் இலங்கையின் முன்னேற்றத்திற்கென அத்தியாவசியமான பங்களிப்பினை ஆற்றி வரும் அதேநேரம், நாட்டின் நிலையான மற்றும் நியாயமான அபிவிருத்திக்கு தேவையான தொழில்நுட்ப அறிவு, ஒழுக்க ரீதியிலான தரநிலைகள் மற்றும் நாட்டிற்கு தேவையான தூரநோக்கு கண்ணோட்டத்தை உருவாக்குதல் ஆகியவற்றிலும் பங்காற்றி வருகின்றன எனவும் தெரிவித்தார்.

அத்துடன் நடைமுறைரீதியாக பரிணாமமடைந்த நாட்டை உருவாக்கும் தருணத்தில், அதற்கென புதிய யோசனைகள் பிறப்பதற்கும், அது சார்ந்த கலந்துரையாடல்களை இலகுபடுத்துவதற்கும் OPA போன்ற அமைப்புகள் முக்கியமான பொறுப்புக்களை நிறைவேற்ற முடியுமெனவும் பிரமதர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இளம் தொழிற்துறையாளர்களின் மன்றத்தை பலப்படுத்துவதற்கும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கென இளம் தொழில் முயற்சியாளர்களின் அதிக செயற்திறன்மிக்க பங்களிப்பை ஊக்கப்படுத்துவதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், தொழிற்துறையாளர்களுக்கே உரித்தான பங்களிப்பிற்க்கு அப்பாற் சென்ற பாரிய பொறுப்புக்கள் தமக்கு உள்ளதென்பதை இளைய தலைமுறையினர் புரிந்துகொள்வது அவசியமாகும் எனவும், ஆலோசனையை மேம்படுத்தல், ஒழுக்க ரீதியிலான தர நிலைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் கூட்டு தலைமைத்துவத்தை ஊக்கப்படுத்துவதன் ஊடாக இலங்கை தொழில் சமூகத்திற்கு தொடர்ச்சியாக வழிகாட்டுதல்களை வழங்குதல் முடியுமென்பபதில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதி சோபித்த ராஜகருணா, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, புத்திஜீவிகள், தொழிற்துறையாளர்கள், சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சுஜீவ லால் தஹநாயக்க, பொதுச் செயலாளர் திசர டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்துறையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு