கோட்டே ரஜமகா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித தந்த தாதுகோபுர திறப்பு விழா ஆகஸ்ட் 24 ஆம் திகதி விகாரை வளாகத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.
வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விஹாரை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித தந்த தாதுகோபுரத்தை மகாசங்கத்தினர், பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்துவைக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 24 ஆம் திகதி விகாரை வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ரஜமகா விஹாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய அளுத்நுவர அனுருத்த நாயக்க தேரர் நினைவு படிகத்தைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, பிரதமர் புதிய தாதுகோபுரத்திற்கு மலர் பூஜைசெய்து வழிபட்டதுடன், அந்த மண்டபத்தின் கீழ் தளத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய விகாரை அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்விலும் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் லங்காராமய, இந்தியானா பௌத்த விகாரை, ஒஹியோவில் உள்ள பௌத்த மைத்ரீ தியான நிலையத்தின் விகாராதிபதியும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டே ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும், அமெரிக்காவின் மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களின் பிரதம சங்கநாயக்கருமான மங்கள தர்ம கீர்த்தி ஸ்ரீ தர்ம தூத சேவா பூஷண் தலங்கம தேவானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மேயர் அருஷ அத்தபத்து உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு