பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

උසස් පෙළ ඉහළින්ම සමත් සිසුන්ට විදෙස් ශිෂ්‍යත්ව පිරිනමයි - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

මෙය සාමාන්‍ය ශිෂ්‍යත්ව වැඩසටහනක් නෙවෙයි. අප රටේ ඉදිරි දැක්ම නිර්වචනය කරන වැඩසටහනක්..

රට ගොඩනැගීමට නම් අධ්‍යාපනය සඳහා වූ ආයෝජනයන් දිරිමත් කරමින් දියුණු මානව සම්පතක් නිර්මාණය කළ යුතුය යන විශ්වාසය රජය සතුව පවතින බවත්, මෙම ශිෂ්‍යත්ව වැඩසටහන රටේ ඉදිරි දැක්ම නිර්වචනය කරන වැඩසටහනක් බවත් අග්‍රාමාත්‍යවරිය ප්‍රකාශ කර සිටියාය.

අග්‍රාමාත්‍යවරිය මේ බව කියා සිටියේ 2024 උසස් පෙළ විභාගය ඉහළින් සමත් වූ සිසුන් පිරිසකට ලෝකයේ ඇති ඉහළ පෙළේ විශ්වවිද්‍යාලයන්හි ප්‍රථම උපාධිය හැදෑරීම සඳහා අවස්ථාව උදාකර දෙමින් ලබාදෙන ශිෂ්‍යත්ව වැඩසටහනේ සමාරම්භක උත්සවය 2026.03.12 දින ඉසුරුපාය අධ්‍යාපන අමාත්‍යාංශ පරිශ්‍රයේදී සහභාගී වෙමිනි.

මෙම ව්‍යාපෘතිය සඳහා රුපියල් මිලියන 4,001 ක මුදලක් ආයෝජනය කිරීමට අපේක්ෂිතය.

​මෙම වැඩසටහන මඟින් 2025 සිට 2033 දක්වා කාලය තුළ සමස්ත සිසුන් 200 දෙනෙකුට විදේශ ශිෂ්‍යත්ව ප්‍රදානය කිරීමට සැලසුම් කර ඇත. මෙහි මූලික අදියර ලෙස 2025/26 අධ්‍යයන වර්ෂය සඳහා සිසුන් 32 කු මේ වන විටත් තෝරාගෙන ඇති අතර, ඉන් සිසුන් 9 දෙනෙකු ඕස්ට්‍රේලියාවේ සිඩ්නි, මෙල්බර්න්, මොනෑෂ් සහ නවසීලන්තයේ ඕක්ලන්ඩ් වැනි ලොව ඉහළම පෙළේ විශ්වවිද්‍යාලවලට ඇතුළත් වී හමාරය

​ශිෂ්‍යත්ව සඳහා සිසුන් තෝරා ගැනීමේදී දැඩි විනිවිදභාවයකින් යුත් ක්‍රමවේදයක් අනුගමනය කර ඇති අතර ​සිසුන් ලෝක ශ්‍රේණිගත කිරීම්වල (QS, THE හෝ ARWU) මුල් 500 ඇතුළත ඇති විශ්වවිද්‍යාල තුළ අධ්‍යාපනය ලැබිය යුතුය.

තෝරාගනු ලබන එක් සිසුවෙකු වෙනුවෙන් වසරකට උපරිම රුපියල් මිලියන 20 බැගින්, වසර හතරක සම්පූර්ණ උපාධි කාලය සඳහා රුපියල් මිලියන 80 ක් (රු. 80,000,000) දක්වා මූල්‍ය ප්‍රතිපාදන වෙන් කෙරේ.

මෙහිදී වැඩිදුරටත් අදහස් දැක් වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය,

අධ්‍යාපන අමාත්‍යාංශය ලෙස අද දින අප හැමෝම සතුටු විය හැකි දවසක්. අපගේ ප්‍රතිපත්ති ප්‍රකාශය තුළ දුන් පොරොන්දුවක පළමු අදියර ලෙස අද දින උසස් පෙළ විභාගය ඉතා ඉහළින් සමත් වූ ළමුන් 33 දෙනෙකුට විදේශ අධ්‍යාපනය හැදෑරීමට ශිෂ්‍යත්ව ලබාදීමක් සිදුවුණා. මෙම ශිෂ්‍යත්ව ලබාදීමේ වැඩසටහන සම්බන්ධයෙන් අදහසක් තිබූ පමණින් එය ක්‍රියාත්මක කිරීමට ලේසි වුණේ නැහැ. ළමයින් තෝරාගැනීම, විනිවිදභාවය පවත්වා ගැනීම, උසස් ගුණාත්මක භාවයෙන් යුත් විශ්වවිද්‍යාල තෝරාගැනීම වැනි සාධක සම්බන්ධයෙන් දීර්ඝ ලෙස සාකච්ඡා කිරීමට සිදු වුණා.

මෙය සාමාන්‍ය ශිෂ්‍යත්ව වැඩසටහනක් නෙවෙයි. අප රටේ ඉදිරි දැක්ම පිළිබඳ නිර්වචනය කරන වැඩසටහනක්. ඒ වගේම ලෝකයේ ඇති ඉහළම විශ්වවිද්‍යාල තුළ අධ්‍යාපන කටයුතු සිදුකිරීමට සිසුන්ට ලැබෙන අවස්ථාවක්. එම නිසා මේ සඳහා තේරී පත්වන සිසුන් තුළ අධ්‍යාපන කුසලතා මෙන්ම නායකත්ව ගුණාංග, පෞරුෂත්වය, දරාගැනීම වැනි සාධක පැවතිය යුතුයි.

අපේ රට සෑදීමටනම් අපට හොඳ පුරවැසියන් අවශ්‍යයි. රට ඉදිරියට ගෙනියන්න පුළුවන් මානව සම්පතක් නිර්මාණය කිරීමට අවශ්‍යයි. සිංගප්පූරුව, චීනය, මැලේසියාව වැනි රටවල් ලෝකයේ ඉදිරියෙන් සිටින්නේ මානව සම්පත ගොඩනැගීම සඳහා ආයෝජනයන් සිදු කරමින් ඉදිරියට යාමට උත්සාහ දැරීම නිසයි. එම ක්‍රියාවලිය අපද අනුගමනය කළ යුතුයි.

උපාධිධාරියෙක් වීමට එහා ගිය ගුණාත්මක බලපෑමක් සමාජයට සිදු කිරීමට හැකි, රටේ සමස්ත සමාජ පරිවර්තන ක්‍රියාවලියේ පුරුකක් ලෙස මෙම ශිෂ්‍යත්වධාරීන් අනාගතයේදී පත්විය යුතුයි යන විශ්වාසය අපට තියෙනවා. මෙය අප දීර්ඝකාලීනව කරන ආයෝජනයක්. ඔබ තුළ ඇති පෞරුෂය තුළින් තවත් ශිෂ්‍යයෙකුට උදව් කිරීම, කණ්ඩායමක් මෙහෙයවීම වැනි සාධක අප බලාපොරොත්තු වෙනවා.

දේශගුණික වෙනස්වීම්, සංස්කෘතික සාධක, ප්‍රියයන්ගෙන් වෙන්වීම වැනි කොපමණ බාධක පැමිණියත් තමන්ගේ ගමන අත් නොහළ යුතුයි යන අධිෂ්ඨානය ඔබ ඇති කරගත යුතුයි. එම සියලුම බාධක ඔබගේ නායකත්ව ගුණාංග වර්ධනය කරගැනීම සඳහා යොදාගන්න. අමාරු අත්දැකීම් වලින් වුවත් ඒ අත්දැකීම අවස්ථාවක් බවට පත් කිරීමට උත්සාහ කරන්න. නව සංස්කෘතීන්, තාක්ෂණයන්, දැනුම් පද්ධතීන් අධ්‍යයනය කරන්න. ඒවා අප රට ගොඩනැංවීමට භාවිත කරන්නේ කෙසේද යන්න සිතන නව චින්තකයෙක් වෙන්න.

පුළුවන් තරම් අත්දැකීම් ලබාගන්න උත්සාහ කරන්න. සන්නිවේදන හැකියාවන්, සහකම්පනය, කණ්ඩායම් මෙහෙයවීම, වෙනත් කෙනෙකු තේරුම් ගැනීම වැනි හැකියාවන් දියුණු කරගන්න උත්සාහ කරන්න. එය තුළින් තමයි අප ඔබෙන් බලාපොරොත්තු වන ඒ බලපෑම මේ රටට ලබාගන්න පුළුවන්. අප ඔබව කිසිසේත්ම තනි කරන්නේ නැහැ. ඕනෑම අර්බුදකාරී තත්ත්වයකදී අප ඔබ වෙනුවෙන් මැදිහත් වීමට සූදානම්. තානාපති කාර්යාල හරහා අවශ්‍ය සම්බන්ධීකරණ මැදිහත්වීම්ද සිදු කිරීමට අප සූදානම්. රට සමාජ පරිවර්තනයක් කරා රැගෙන යාමටනම් එය අප සැමගේම සාමූහික මැදිහත්වීම මත එකිනෙකාව ආරක්ෂා කරගනිමින් සිදු කළ යුතුයි. ශ්‍රී ලංකාව පමණක් නොව මුළු ලෝකයම ජනහිතවාදී මඟකට ගැනීමට හැකි නායකයන් අප නිර්මාණය කළ යුතුයි.

මෙම වැඩසටහන සඳහා අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍ය වෛද්‍ය මධුර සෙනෙවිරත්න මහතා, අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන සහ වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍යාංශයේ ලේකම් නාලක කළුවැව මහතා ඇතුළු අධ්‍යාපන අමාත්‍යාංශ නිලධාරීන්, සිසු දරුවන් ඇතුළු පිරිසක් සහභාගී වූහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (11) இரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மீண்டும் நாட்டை வந்தடைந்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிலிப்பைன்ஸின் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைப் (IRRI) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (11) பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸில் (Los Baños) அமைந்துள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRRI) தலைமையகத்தைப் பார்வையிட்டார்.

இதன்போது, அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி யுவோன் பின்டோவை (Yvonne Pinto) சந்தித்த பிரதமர், இலங்கையின் நெற்பயிர்ச்செய்கை மற்றும் விவசாயத்துறையின் நிலையான அபிவிருத்திக்காக இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.

இலங்கை நெல் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, நெல் உற்பத்தியில் காணப்படுகின்ற தடைகள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் விவசாயிகளை நவீன தொழில்நுட்ப முறைகளுக்கு இட்டுச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்துப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் நெல் விளைச்சலை அதிகரிப்பதற்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. அதற்கமைய, காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்களில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI) கொண்டுள்ள உலகளாவிய ஆராய்ச்சி அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ள இணக்கம் காணப்பட்டது.

அத்தோடு, இலங்கையின் விவசாய நிறுவனங்களின் கொள்ளளவை மேம்படுத்துதல், ஆராய்ச்சிப் கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் அறிவுப் பரிமாற்றத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பினரதும் கவனம் செலுத்தப்பட்டது.

விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் புத்தாக்கங்கள் மூலம் இலங்கையின் விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த சர்வதேச ஒத்துழைப்பு பெரிதும் உதவும் என இதன்போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மணிலாவில் கொள்கை விளக்க உரையாடலிலும் பங்கேற்பு.

இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிலிப்பைன்ஸிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், நடைமுறையிலுள்ள திட்டங்களை மீளாய்வு செய்தல் மற்றும் எதிர்காலக் கூட்டாண்மை வாய்ப்புகளைக் கண்டறிதல் ஆகியவற்றுக்கு இப்பேச்சுவார்த்தைகளின் போது முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பிரதமர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masatsugu Asakawa சந்தித்தார். இச்சந்திப்பின் போது, இருதரப்புக்கும் இடையிலான உறவை மேலும் உறுதிப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. பிரதமரை வரவேற்ற தலைவர் Masatsugu Asakawa, அண்மைக்கால பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கைப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.

’டிட்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய உதவிகளுக்கும், இலங்கையுடன் முன்னெடுத்து வரும் விரிவான அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவு இன்றியமையாதது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (தெற்கு, மத்திய மற்றும் மேற்கு ஆசியாவுக்கான) பிரதித் தலைவர் Yingming Yang அவர்களையும் பிரதமர் சந்தித்தார். இதன்போது, இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

துறைசார் குழு 3 இன் (Sectors Group 3) பணிப்பாளர் நாயகம் Christine Engstrom அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மானுட மற்றும் சமூக அபிவிருத்தி, பொதுத்துறை முகாமைத்துவம் மற்றும் நிதித்துறை சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் எதிர்கால முதலீடுகளின் போது, உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மேலதிகமாக, மனிதவள மேம்பாடு மற்றும் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் தரத்தை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இப்பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ASEAN நிறுவனங்கள், பிலிப்பைன்ஸ் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பங்கேற்ற கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி குறித்த கொள்கை விளக்க உரையாடலில் பிரதமர் கலந்துகொண்டார். பிராந்திய கல்வி முறைகள், கொள்கை ரீதியான ஒத்துழைப்பு மற்றும் கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையே கல்விசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை, குறிப்பாகக் கொள்கைப் பரிமாற்றம் மற்றும் நிறுவன ரீதியான ஒத்துழைப்பு ஆகிய துறைகள் குறித்துப் பிரதமர் வலியுறுத்தினார். அத்துடன், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) துறையின் அபிவிருத்தி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப திறன் அபிவிருத்திக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த மணிலா விஜயமானது, நிலையான அபிவிருத்தியை முன்னெடுத்தல், கல்வி முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இலங்கை, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிராந்திய பங்காளிகளுக்கு இடையிலான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பிரதமர் ஊடகப் பிரிவு

பெண் வலுவூட்டலுக்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு தலைமைத்துவ விருது

பெண்களின் ’ஊதியமற்ற’ உழைப்பு பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மணிலாவில் தெரிவிப்பு.

பெண்கள் குடும்பத்திற்காக ஆற்றுகின்ற, எனினும் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத ’ஊதியமற்ற’ வீட்டுப் பணிகள், குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன என்பதைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் முதன்மை உரை நிகழ்த்திய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பெண்களின் பணிகளை உரிய முறையில் இனங்கண்டு அதனை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கெடுக்கச் செய்யக்கூடிய பெண் நேய கொள்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தினார். இத்துறையில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுவதற்குத் தரமான கல்வியை வழங்குவது அவசியமானது எனவும், இலங்கை எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

குறிப்பாக, தீர்மானம் எடுக்கும் மட்டத்திலான அரசியல் செயல்முறைகளில் பெண்கள் உள்வாங்கப்படுதல், வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் சமவாய்ப்புகளைக் கொண்ட கல்வி முறையைப் பேணுதல் ஆகியன நிலையானதும் நீதியானதுமான அபிவிருத்திக்கு அவசியமானவை என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.

பெண் தலைமைத்துவம் மற்றும் பெண் வலுவூட்டலுக்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆற்றிவரும் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவருக்கு "ஷிரீன் லத்தீப் பெண் தலைமைத்துவ விருது" (Shireen Lateef Women’s Leadership Award) කාන්තා සවිබලගැන්වීම වෙනුවෙන් අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරියට නායකත්ව සම්මානයක් வழங்கி வைக்கப்பட்டது.

இந்த விழா ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட நிர்வாகத்தினர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் எனப் பலரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இருதரப்புப் பேச்சுவார்த்தை 

2026 மார்ச் 09 முதல் 11ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பத் திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தினார்.

அதற்கமைய, மார்ச் 09ஆம் திகதி பிரதமர், பிலிப்பைன்ஸ் கல்விச் செயலாளர் Sonny Angara அவர்களுடன் கலந்துரையாடினார். கல்விக் கொள்கை, ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல்மய கற்றல் முன்முயற்சிகள் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது உட்பட, கல்வித்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. பாடத்திட்டங்களை நவீனப்படுத்துதல் மற்றும் கற்றலில் தொழில்நுட்பத்தை உள்வாங்குதல் போன்ற இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மறுசீரமைப்புகள் குறித்தும் பிரதமர் பிலிப்பைன்ஸ் தரப்பிற்கு விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் உயர்கல்வி அதிகாரசபையின் (CHED) தலைவர் கலாநிதி Shirley C. Agrupis தலைமையிலான தூதுக்குழுவினரைப் பிரதமர் சந்தித்துப் பேசினார். ஆராய்ச்சி ஒத்துழைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்விசார் கூட்டுறவு, மாணவர் மற்றும் விரிவுரையாளர் பரிமாற்றம் மற்றும் தர உறுதிப்பாட்டுக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி, இரு நாடுகளினதும் உயர்கல்வி மேம்பாடு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மற்றொரு சந்திப்பில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அதிகாரசபையின் (TESDA) செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான Jose Francisco B. Benitez அவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) துறையின் ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு, நிறுவன ரீதியான கூட்டுறவு மற்றும் தொழிலாளர் செயற்பாட்டினை மேம்படுத்தும் வகையில் தகைமைக் கட்டமைப்புகளை ஒருங்கிணைத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பேண்தகு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்திக்கு ஆதரவாகக் கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளினதும், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களினதும் அர்ப்பணிப்பை இச்சந்திப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தின.

இலங்கைத் தூதுக்குழுவில் பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சாணக்க தல்பாஹேவா, பிரதமரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பி.எச். பியுமி பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு