பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

“We Are Building a Stable, Transparent and Resilient Sri Lanka Ready for Sustainable Investment Partnerships” – Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya addressed members of the Chief Executives Organization (CEO) during a session held on 13 February 2026 at the Shangri-La Hotel, Colombo, as part of CEO’s Pearl of the Indian Ocean: Sri Lanka programme.

The Chief Executives Organization is a global network of business leaders representing diverse industries across more than 60 countries. The visiting delegation comprised leading entrepreneurs and executives exploring Sri Lanka’s economic prospects, investment climate, and development trajectory.

Addressing the gathering, the Prime Minister emphasized that Sri Lanka’s reform agenda is anchored in structural transformation, transparency, and inclusive growth.

“We are committed not only to ensuring equitable access to education, but equitable access to quality education. Our reforms are designed to create flexible pathways for young people beyond general education and to build a skilled and adaptable workforce for the future.”

She highlighted that the Government is undertaking a fundamental pedagogical shift towards a more student-focused, less examination-driven system as part of a broader national transformation.

Reflecting on Sri Lanka’s recent political transition, the Prime Minister stated:

“The people gave us a mandate to restore accountability, strengthen democratic governance, and ensure that opportunity is not determined by patronage or privilege, but by fairness and merit. Sri Lanka is stabilizing. We have recorded positive growth, restored confidence in key sectors, and are committed to sustaining this momentum. But our objective is not short-term recovery it is long-term resilience.”

Addressing governance reforms aimed at improving the investment climate, she said:

“We are aligning our legislative and regulatory frameworks with international standards to provide predictability, investor protection, and institutional transparency. Sustainable investment requires trust, and trust requires reform.”

Turning to the recent impact of Cyclone Ditwa, which affected all 25 districts of the country, the Prime Minister underscored the urgency of climate resilience.

“Climate change is not a distant threat. It is a lived reality for our people. We are rebuilding not simply to recover, but to build resilience, strengthen disaster mitigation systems, and protect vulnerable communities.”

Inviting CEO members to consider Sri Lanka as a strategic partner in the Indo-Pacific region, she highlighted opportunities in value-added mineral exports, logistics and shipping, agro-processing, renewable energy, pharmaceuticals, and innovation-driven sectors.

“We are not looking for speculative gains. We are seeking long-term partners who share our commitment to transparency, sustainability, and inclusive development.”

She further emphasized collaboration in education, research, vocational training, and innovation as essential pillars for sustained economic growth.

Concluding her address, the Prime Minister expressed appreciation to the Chief Executives Organization for selecting Sri Lanka as part of its 2026 programme and reaffirmed the Government’s readiness to engage constructively with responsible global investors.

The event was attended by the Governor of the Western Province, Mr. Hanif Yusoof, and other distinguished guests.

Prime Minister’s Media Division

நீதிமன்றத் தீர்ப்புகளின்படியே ஆசிரியர் தேர்வுகள் நடத்தப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பட்டம் பெற்ற திகதியைத் திருத்தம் செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சிறுவர் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, புதிய டிஜிட்டல் கொள்கை ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகச் சரியான திட்டமிடலின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதியைச் செலவிட்டு, அதன் முன்னேற்றத்தைச் சமர்ப்பியுங்கள்.

எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள இரண்டு ஆசிரியர் தேர்வுகளும் தற்போதுள்ள வழக்கு விசாரணைகளின்படி வழங்கப்படவுள்ள நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அமைவாகவே நடத்தப்படும் என்றும், கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, பட்டம் பெற்ற திகதி தொடர்பான நிபந்தனைகளைத் திருத்தம் செய்வதற்கு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மொனராகலை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக மொனராகலை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்குத் திறன் பலகைகளை (Smart Boards) வழங்கும் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த 132 பாடசாலைகளுக்குத் திறன் பலகைகள் வழங்கப்படவுள்ளன. பிரதமரின் அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் செயலணியின் தலையீட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் அடையாளமாக, 10 இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்குத் திறன் பலகைகளை வழங்கும் நிகழ்வு பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது. சிறுவர் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள புதிய டிஜிட்டல் கொள்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இதன்போது பிரதமர் தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 01 இற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கற்றல் முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து நேரில் ஆராய்வதற்காகப் பிரதமர் இன்று (13) மொனராகலை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது கும்புகன மொ/ ஸ்ரீ சண்முகம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் மொனராகலை மதுருகெட்டிய மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்குச் சென்று தரம் 01 மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளைப் பிரதமர் கண்காணித்தார்.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு, மதுருகெட்டிய மகா வித்தியாலயத்தின் பெயரை "மொனராகலை தர்மராஜ மகா வித்தியாலயம்" என மாற்றுவதற்குப் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் முன்வைத்த முன்மொழிவுக்கும் இதன்போது பிரதமர் அனுமதி வழங்கினார்.

புதிய செயல் நூல்கள் மற்றும் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வி முறை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதில் பங்கேற்பதாகவும் இதன்போது ஆசிரியர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

மொனராகலை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற கல்வி அதிகாரிகளுடனான சந்திப்பில் உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவிக்கையில்:

தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இது முழுமையான தீர்வாக அமையாவிட்டாலும், இந்தத் தேர்வுகள் மூலம் குறிப்பிடத்தக்க வசதியை ஏற்படுத்த முடியும். நீதிமன்றத் தீர்மானத்தின்படி பட்டம் பெற்ற திகதி 2025.06.30 என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பலரது கோரிக்கைகளை ஏற்று அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அந்தத் திகதியைத் திருத்தம் செய்ய நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதன் தீர்மானங்களுக்கு அமைய நாம் செயற்படுவோம்.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகச் சரியான திட்டமிடலின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதியை வெளிப்படைத்தன்மையுடன் செலவிட்டு அதன் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். தேசிய, மாகாண அல்லது கிராமிய, நகர்ப்புற எனப் பிரிந்து எம்மால் இந்தப் பயணத்தை முன்னெடுக்க முடியாது. கல்வி அதிகாரிகள் என்ற வகையில் நீங்கள் சரியான தரவுகளின் அடிப்படையில் விரைவான மற்றும் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அத்துடன், பிரிவெனா கல்வியை மேம்படுத்துவது மற்றும் பிரிவெனா ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கல்வி அமைச்சின் பிரிவெனா குழு தற்போது கலந்துரையாடி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, வர்த்தக மற்றும் வாணிப பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட, ஊவா மாகாண கல்விச் செயலாளர் நிஹால் குணரத்ன உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கொழும்பிலிருந்துகொண்டு கிராமங்களுக்கான தீர்மானங்களை நாம் எடுக்கமாட்டோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கட்டமைப்புக்குழுக்கள் ஊடாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் வழியாகத் தேவைகளுக்கேற்ப திட்டங்களை அனுப்புங்கள்.

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை அனைத்து அதிகாரிகளும் வினைத்திறனுடனும் மனிதாபிமானத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்ற வேண்டும்

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் போது, கொழும்பிலிருந்துகொண்டு கிராமங்கள் பற்றிய தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனவும், கட்டமைப்புக்குழுக்கள் மூலம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் ஊடாகத் தேவைகளுக்கேற்ப திட்டங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை அனைத்து அதிகாரிகளும் வினைத்திறனுடன் செயற்பட அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் மற்றும் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக ஹம்பாந்தோட்டை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் பெப்ரவரி 12ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பிரிவெனாதிபதிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைக்கப் பிரதமர் இதன்போது வாய்ப்பளித்தார். அதிபர் சம்பள முரண்பாடு, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதால் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் பிரிவெனா கல்வியை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அதிகாரிகள் இதன்போது கருத்துகளை முன்வைத்தனர்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து 2025ஆம் ஆண்டு முதல் நாம் கலந்துரையாடி, தரவுகளைச் சேகரித்துத் தயாராகி வந்தோம். அதில் அதிகாரிகள் என்ற ரீதியில் நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினீர்கள். நாம் ஆரம்பித்துள்ளது ஒரு கடினமான, நீண்ட பயணம். எதிர்காலத்திலும் உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே புதிய கல்விச் சீர்திருத்தங்களை நாம் ஆரம்பித்தோம். பலர் இதற்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சித்தனர். எமது அரசியல் நீரோட்டத்தில் நாம் புரிந்துகொண்ட விடயம் என்னவென்றால், இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். எமது பெறுமதியான சொத்து மனித வளமே. அந்த வளத்தை நாம் சரியாகக் கட்டியெழுப்ப வேண்டும்.

எமது நாட்டில் நிலவும் பல நெருக்கடிகளுக்கான தீர்வுகள் கல்வியிலேயே உள்ளன. பொருளாதாரப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள், போதைப்பொருள், வன்முறை, அரசியல் கலாசாரத்தின் வீழ்ச்சி, ஊழல், விரயம் மற்றும் மனித உறவுகளின் வீழ்ச்சி ஆகிய அனைத்துக்கும் தீர்வு கல்வியிலேயே தங்கியிருக்கின்றது. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டுமானால், கல்வி முறையில் மாற்றம் ஏற்படுவது அத்தியாவசியமாகின்றது.

கல்வி முறையில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கவும், பாடசாலை இடைவிலகலைக் கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்பைப் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பிள்ளைகளுக்கு எதிர்காலம் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தவும் இக்கல்வி முறை அவசியமாகும்.

பாடசாலைக் கட்டமைப்பில் கிராமப்புற, நகர்ப்புற, தேசிய, மாகாண மற்றும் கஷ்டப் பிரதேச பாடசாலைகள் எனப் பல்வேறு சமத்துவமின்மைகள் காணப்படுகின்றன. இது இவ்வாறு தொடர முடியாது. அனைவரும் எமது பிள்ளைகள்; அவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கப்பெற வேண்டும்.

பாடசாலைகளை ஆரம்பிப்பதோ அல்லது வகுப்புகளை அதிகரிப்பதோ அரசியல் தீர்மானமாக இருக்கக்கூடாது. அது கட்டமைப்புக்குழுவினால் எடுக்கப்படும் தீர்மானமாக அமைய வேண்டும். உங்கள் பிரிவைப் பற்றியும், கிராமத்தின் பொருளாதார நிலை மற்றும் மக்கள் தொகை பற்றியும் கட்டமைப்புக்குழுவின் பிரதிநிதிகளான நீங்களே அறிவீர்கள். உங்களின் தீர்மானங்களின்படி, தேவைகளுக்கேற்ப திட்டங்களைத் தயாரித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுடன் கலந்துரையாடி எமக்கு அனுப்புங்கள். நாம் தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் ஏனைய வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்போம். நாம் கொழும்பிலிருந்துகொண்டு கிராமத்தின் தேவைகள் குறித்துத் தீர்மானம் எடுக்கமாட்டோம்.

சம்பள முரண்பாட்டைக் குறைக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தற்போது தயாராக உள்ளது. பிரிவெனா கல்வியில் புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் கல்வி அமைச்சின் பிரிவெனா குழுவின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குப் பிரிவெனாதிபதிகளின் ஒத்துழைப்பு எமக்குத் தேவைப்படுகின்றது.

அதிகாரிகளின் மந்தகதியால் ஏற்படும் தாமதங்கள் காரணமாகவே பெரும்பாலான ஆசிரியர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குச் செல்கின்றனர். எனவே, கல்வி அமைச்சு முதல் பாடசாலை வரை அனைத்து அதிகாரிகளும் வினைத்திறனுடனும் மனிதாபிமானத்துடனும் செயற்பட அர்ப்பணிக்க வேண்டும்" எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரிவெனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தரமான கல்வியை முறையாகப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் மதிக்கிறது

ஒரு நாடாக எதிர்பார்க்கும் முழுமையான மாற்றத்தை அடைந்துகொள்வதற்குத் தகுதியான மனித வளம் அவசியமானது என்றும், அதற்காகப் பிள்ளைகளுக்கு முறையான மற்றும் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (12) அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொண்ட கல்விசார் கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின் போது பெலியத்த ருஹுணு விஜயபா தேசிய பாடசாலை மற்றும் அதன் ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றுக்குச் சென்ற பிரதமர், 2026ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பயிற்சிப் புத்தகங்கள், அடிப்படைப் பாடத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் வகுப்பறைச் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, பாடசாலை ஆசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் மதிப்பதாகத் தெரிவித்த பிரதமர், ஆசிரியர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தைப் பாதுகாப்பதற்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கும் ’கல்விப் பேரவை’ ஒன்றினை நிறுவுவதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பாடசாலைகளுக்கு இடையே காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகளின் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அதனையடுத்து வீரகெட்டிய ராஜபக்ஷ ஆரம்பப் பாடசாலைக்கு விஜயம் செய்த பிரதமர், புதிய கல்வி மறுசீரமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் தர வகுப்பறைகள் மற்றும் கற்பித்தல் முறைகளைக் கண்காணித்ததுடன், பிள்ளைகளுடன் சிநேகபூர்வமாக உரையாடினார். பின்னர் வீரகெட்டிய மத்திய மகா வித்தியாலயம் மற்றும் ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றின் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அவர், வீரகெட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்புகளை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், உயர்தர மாணவர்களைப் பாடசாலையிலேயே தக்கவைத்துக்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தினார்.

அம்பாந்தோட்டை லுணம துடுகெமுனு மகா வித்தியாலயத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் கலந்துகொண்ட பிரதமர், அங்குள்ள உயர்தர உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஒப்பிடுகையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்துத் தனது கவனத்தைச் செலுத்தினார். பாடசாலை நிர்வாகம் முறையான திட்டமிடலின் கீழ் செயற்பட்டு மாணவர்களின் வரவை அதிகரிக்க வேண்டும் என்றும், வருங்கால மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது இவ்வாறான முழுமையான வசதிகளைக் கொண்ட பாடசாலைகளைப் பெரிதும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் கண்காணிப்பு விஜயத்தின் இடையே நைகல ரஜமகா விகாரைக்குச் சென்ற பிரதமர், அதன் விகாராதிபதி அதிவணக்கத்துக்குரிய வகமுல்லே உதித தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.

இந்நிகழ்வில் அம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நிஹால் கலப்பத்தி, பிரதி அமைச்சர்களான ருவன் செனரத் மற்றும் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர் அதுல வெலந்தகொட உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவைப் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமரைப் பிரதமரைச் சந்தித்தனர்.

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் (European External Action Service - EEAS) பிரதிநிதிகள், பெப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், இலங்கையின் முக்கிய அபிவிருத்தி மற்றும் பொருளாதாரப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்குவதைச் சுட்டிக்காட்டியதுடன், இருதரப்புக்கும் இடையிலான நீண்டகாலப் பங்காளித்துவத்தை மேலும் பலப்படுத்தலும் ஆழப்படுத்தலும் எத்துணை முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.

அண்மையில் ஏற்பட்ட சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய காலோசிதமான உதவிகளுக்காகப் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, தேவையேற்பட்ட தருணங்களில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து காட்டிவரும் ஒற்றுமையையும் ஆதரவையும் விசேடமாகச் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட பொருளாதார ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை எளிதாக்குவதற்குத் தேவையான சட்ட மற்றும் கொள்கை மறுசீரமைப்புகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.

பொருளாதார ஸ்திரத்தன்மை, நல்லாட்சி ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்கும், நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கும் புதிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்துப் பிரதிநிதிகள் குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவருமான செல்வி பாவ்லா பம்பலோனி (Ms. Paola Pampaloni), ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தலைவருமான செல்வி கார்மென் மோரேனோ (Ms. Carmen Moreno), ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் பிரதிநிதிகள், பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளரைப் பிரதமர் சந்தித்தார்.

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள Shannon Cowlin அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், பெப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், புதிய பணிப்பாளருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீண்டகாலமாக நிலவிவரும் கூட்டுறவை நினைவுகூர்ந்தார். அத்துடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி காட்டிவரும் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கும், வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கும் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

’டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய காலத்திற்கேற்ற உதவிகளுக்காகத் தனது நன்றிகளைத் தெரிவித்த பிரதமர், இயற்கை அனர்த்தங்களின் உடனடிப் பாதிப்புகளைக் குறைப்பதில் இத்தகைய உதவிகள் மிக முக்கியமானவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சூறாவளிக்குப் பின்னரான மீட்சிப் பணிகளின் போது, குறிப்பாக நாட்டை கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு முயற்சிகளில் இலங்கைக்கு மேலும் உதவத் தயாராக இருப்பதை ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிதிகள் குழு மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பையும் இதன்போது வெளிப்படுத்தியது.

இந்நிகழ்வில் தெற்காசிய திணைக்களத்தின் (SARD) பதில் பணிப்பாளர் நாயகம் செல்வி சோனா ஸ்ரேஸ்தா (Ms. Sona Shrestha), ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடத் தூதுக்குழுவின் செயற்பாட்டுத் தலைவர் செல்வி சோல்பொன் மம்பெடோவா (Ms. Cholpon Mambetova), பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சமந்த பண்டார, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பணிப்பாளர் திரு. ரஞ்சித் குருசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு