பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

ආපදාවෙන් අවතැන් වූ සියලු ජනතාවට ඔවුන්ගේ ජීවිත යළි නගාසිටුවීම සඳහා හැකි සෑම සහයෝගයක්ම ලබාදෙනවා - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

අපදාවට පත් ජනතාව වෙනුවෙන් කැප වී කටයුතු කරන ත්‍රිවිධ හමුදාව, පොලිසිය, රාජ්‍ය නිලධාරීන්, ස්වේච්ඡා සංවිධාන වගේම ජනතාවටත්, සියලු විදේශිය රටවලටත් රජයේ ස්තුතිය පිරිනමනවා.

ආපදාවෙන් අවතැන් වූ සියලු ජනතාවට ඔවුන්ගේ ජීවිත යළි නගාසිටුවීම සඳහා හැකි සෑම සහයෝගයක්ම ලබාදෙන බවත්, අපදාවට පත් ජනතාව වෙනුවෙන් කැප වී කටයුතු කරන ත්‍රිවිධ හමුදාව, පොලිසිය, රාජ්‍ය නිලධාරීන්, ස්වේච්ඡා සංවිධානවලට මෙන්ම මේ රටේ ජනතාවට සහ සියලු විදේශිය රටවලටත් රජයේ ස්තුතිය පිරිනමන බව අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

රට තුළ ඇති වූ හදිසි ආපදාතත්ත්වය පිළිබඳ අද (03) පාර්ලිමේන්තුවේ අදහස් දක්වමින් අග්‍රාමාතය තුමිය මේ බව සඳහන් කළාය.

මෙහිදී වැඩි දුරටත් අදහස් දැක් වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මෙසේද කීවාය.

අපේ රටේ ඉතිහාසයේ ඇතිවූ විශාලතම විපත් වලින් දරුණුම එකකට පසුගිය දින කිහිපය තුළ, අපට මුහුණදීමට සිදු වුණා. මේ විපතින් ජීවිත අහිමිවූණු, අවතැන්වුණු, දේපළ හානි සිදුවුණු සහ විවිධ අයුරින් විපතට පත්වූ සියලුම සහෝදර ජනතාව වෙත පළමුවෙන්ම මගේ සාතිශය සංවේගය පළකරනවා.

මේ ආපදාවෙන් නිවෙස්, ව්‍යාපාර, දේපල අහිමි ව අවතැන් වූ සියලු ජනතාවට ඔවුන්ගේ ජීවිත යළි නගාසිටුවීම උදෙසා රජයක් ලෙස කළ හැකි සෑම සහයෝගයක්ම ලබාදෙන බවත් මම මේ මොහොතේ සඳහන් කරන්න කැමතියි.

ඒ වගේම පසුගිය දින කිහිපය පුරා විශේෂයෙන්, අපේ රටේ රාජ්‍ය නිලධාරීන් සහ මහජන නියෝජිතයින් දැඩි වෙහෙසක් ගනිමින් විපතට පත්වූ අපේම සහෝදර ජනතාව ඉන් මුදවා ගැනීම සහ ඔවුන්ට සහන සැලසීම වෙනුවෙන් තමන්ගේ උපරිම දායකත්වය ලබා දුන්නා. රාජ්‍ය නිලධාරීන් සමග එක්ව මේ කටයුත්තට උරදුන් (ආණ්ඩු පක්ෂ සහ විපක්ෂ) මහජන නියෝජිතයින් සියලු දෙනාටමත් මම මගේ විශේෂ ස්තුතිය පිරිනමන්න කැමතියි. විශේෂයෙන් මෙම අභියෝගයට මුහුණ දීමේදී , අපේ ජනතාව අතර තිබෙන එකමුතුකම, ධෛර්යය, කරුණාව, සහකම්පනය, එකිනෙකාට උදවු කරගැනීම වගේ ගුණාංග අපට දකින්න ලැබුණා. එය අපට මේ මෙහෙයුම ඉදිරියට ගෙනයාමට තව තවත් ශක්තියක් වනවා.

මෙම අපදාවෙන් අනතුරට පත්වූ සහෝදර ජනතාව මුදවා ගැනීමටත්, ඔවුන්ව ආරක්‍ෂිත ස්ථාන වෙතගෙනයාමටත් දැඩි ලෙස වෙහෙසී කටයුතු කළ, තවමත් ඒ මෙහෙයුමේ රැඳී සිටින ශ්‍රී ලංකා යුද්ධ හමුදාව, නාවික හමුදාව, ගුවන් හමුදාව, පොලීසිය, ඇතුළු රාජ්‍ය නිලධාරීන්, හා සියලුම හදිසි සහන කණ්ඩායම් වෙත මම මගේ ආචාරය පුදකරන්න කැමතියි.ඒ වගේම තවත් අයෙකුගේ ජීවිතය බේරා ගැනීමට තමන්ගේ ජීවිතය බිළි දුන් අවස්ථාත් තිබෙනවා, එය පහසුවෙන් දකින්න නොලැබෙන වීරත්වයක්. ඒ සියළු දෙනාම නැවත නැවතත් මම ගෞරවයෙන් සිහිපත් කරනවා. ඒ වගේම මුදාගැනීමේ මෙහෙයුම් අතරතුර වෙන්නප්පුව ලුණුවිල ගින් ඔයේදී අනතුරකට ලක්වූ ශ්‍රී ලංකා ගුවන් හමුදාවට අයත් Bell 212 හෙලිකොප්ටර් යානයේ සිටි ගුවන් නියමු Wing Commander නිර්මල සියඹලාපිටියට වගේම ගංවතුර පාලනය කිරීම සඳහා චුණ්ඩිකුලම් ප්‍රදේශයේ කලපු මෝය පුළුල් කිරීමේ කටයුතුවල යෙදී සිටියදී අතුරුදන් වූ නාවික හමුදා නිලධාරීන් පස්දෙනාටත් මම මගේ ආචාරය පුදකරනවා. දහස් ගණනක් මිනිසුන්ගේ ජීවිත බේරාගැනීම වෙනුවෙන් තම ජිවිතය පරදුවට තැබූ ඒ වීරත්වය කිසිදා අමතක කළ නොහැකියි.

ඒ වගේම රජයේ ආණ්ඩුකාරවරුන්, දිස්ත්‍රික් හා ප්‍රාදේශීය ලේකම්වරුන්, ග්‍රාම නිලධාරීන්, ප්‍රාදේශීය පාලන අධිකාරීන්, සහ අත්‍යවශ්‍ය සේවා සපයන්නන් ද, මේ දුෂ්කර මොහොතේ සෘජුවම ක්ෂේත්‍රයේ සිට ක්‍රියාත්මක වනවා. ඔවුන්ගේ සේවයත් විශේෂයෙන් අගය කළ යුතුයි.

ඒ වගේම විශේෂ ආපදා කළමනාකරණ මධ්‍යස්ථානය, රජයේ මිනින්දෝරු දෙපාර්තමේන්තුව, දුරකථන සේවා සමාගම් වල කාර්ය මණ්ඩලය, ලංකා විදුලිබල මණ්ඩලය, ජලසම්පාදන හා ජලාපවහන මණ්ඩලය යන ආයතන වල ආයතන ප්‍රධානීන් සහ සේවක මහත්ම මහත්මීන් වෙත මම මගේ විශේෂ ස්තූතිය පිරිනමනවා.. ඔවුන් අත්‍යවශ්‍ය සේවා නැවත ස්ථාපිත කිරීම සදහා දැඩි කැපවීමකින් ක්‍රියා කරනවා.

අපේ සෞඛ්‍ය ක්ෂේත්‍රය, වෛද්‍යවරු, හෙද නිලධාරීන්, රෝහල් කාර්ය මණ්ඩලය, මහජන සෞඛ්‍ය පරීක්ෂක නිලධාරීන්, Midwife ලා සහ ප්‍රජා සෞඛ්‍ය සේවකයන්ට ඔවුන්ගේ දැඩි කැපවීම වෙනුවෙන් මම මගේ ගෞරවය පිරිනමන්න කැමතියි.

ඒ වගේම විශේෂයෙන් සිහිපත් කළ යුතුයි, මේ මොහොතේ විපතට පත්වූවන් වෙනුවෙන් නොයෙක් ආකාරයෙන් උපකාර කිරීම සඳහා ඉදිරිපත් වන ස්වෙච්චා කණ්ඩායම්, තරුණ කණ්ඩායම්, කාන්තා කණ්ඩායම්, නොයෙක් තරුණ සමූහයන් සහ සංවිධාන, ආගමික ආයතන. මේ සියලු දෙනාම කිසිදු ලාභ ප්‍රයෝජනයක් නොතකා විපතට පත්වූවන් වෙනුවෙන් තම දායකත්වය ලබාදෙනවා. දින ගණනාවක් තිස්සේ මේ මොහොතේත් ඔවුන් මේ ක්‍රියාන්විතය වෙනුවෙන් කැපවී ක්‍රියා කරනවා. රටක් විදිහට, ශ්‍රී ලාංකික ජාතියක් විදිහට අපට තිබෙන වටිනාම ශක්තිය තමයි මේ මිනිස්කම හඳුනන අනිකා කෙරෙහි සහකම්පනයෙන් යුතු මිනිස් හදවත්. ඒ සියලු දෙනා වෙත මේ මොහොතේ මම මගේ ආචාරය පුදකර සිටිනවා.

ඒ වගේම මේ අභියෝගාත්මක අවස්ථාවේ අප සමග එක්වූ, අපට ශක්තියක් වූ අපේ මිත්‍ර විදෙස් රටවල් මම විශේෂයෙන් සිහිපත් කරන්න කැමතියි. අපට අවශ්‍ය නොයෙක් උපකාර කරමින්, අවශ්‍යතා සොයා බලමින්, අවශ්‍ය සහන සේවා සැපයීම සඳහා රාජතාන්ත්‍රික මට්ටමින් මැදිහත් වෙමින් ක්‍රියාකළ සියලුම විදෙස් රාජ්‍යන්ට වගේම ඒ රටවල් නියෝජනය කරන විදෙස් දූත මණ්ඩල ප්‍රධානීන් ඇතුළු නිලධාරීන්ටත් මේ මොහොතේ මම කෘතඥ වනවා. නොයෙක් අයුරින් ශ්‍රී ලාංකිකයින්ට උපකාර කිරීමට ඉදිරිපත්ව සිටින ජාත්‍යන්තර සංවිධාන රැසක් සිටීමත් මේ මොහොතේ අපට ශක්තියක්. ඔවුන්වත් මම විශේෂයෙන් සිහිපත් කරනවා.

ඒ වගේම විදෙස්ගතව සේවය කරන සහ විදෙස් රාජ්‍යයන්හි පදිංචි ශ්‍රී ලාංකිකයින් සහ ඔවුන්ගේ නොයෙක් සංවිධාන. මේ මොහොතේ තමන්ගේ මාතෘ භුමිය පත්ව තිබෙන ව්‍යසනය දැකලා, ඔවුන් තම තමන්ගේ ශක්ති ප්‍රමාණයෙන් මේ රට යළි ගොඩනැගීමටත්, විපතට පත්වූවන්ට දෙපයින් නැගී සිටීම සඳහාත් උපකාර කරමින් සිටිනවා. ලෝකයේ කොතැනක හිටියත් ඛේදවාචකයක් හමුවේ ශ්‍රී ලංකික සහෝදර ජනතාව වෙනුවෙන් ඒ මැදිහත්වීමට, කැපවීමට සහ සහයෝගයට මම විශේෂයෙන් ඒ සහෝදර ජනතාවට ස්තුතිවන්ත වනවා.

පවතින තත්ත්වය පිළිබඳව නිතරම නිවැරදි තොරතුරු යාවත්කාලින කරන මාධ්‍යවේදීන්, මාධ්‍ය ආයතන, සමාජ මාධ්‍ය ක්‍රියාකාරීන්, සහ නිවැරදි විශ්වසනීය වගකිම්සහගත තොරතුරු බෙදාහරින පුරවැසියන්ටත් මම ස්තූතිය පළ කරනවා. විපතට පත්වූවන් මුදාගැනීමේ මෙහෙයුම් සඳහා මගපෙන්වීමට, නිවැරදි කළමනාකරණය සිදුකිරීමට වගේම ජනතාව වෙත ආරක්ෂාකාරී ලෙස මගපෙන්වන්නත් ඔවුන්ගේ සේවය අතිශය වැදගත් වනවා. ඒ සමගින් මා සිහිපත් කළ යුතු තවත් විශේෂ දෙයක් තිබෙනවා. ඇතැම් පුද්ගලයින් නොයෙක් වාසි වෙනුවෙන් මේ මොහොතේත් වැරදි තොරතුරු ප්‍රචාරය කරමින් සිටින බව අපට දකින්න තිබෙනවා. ඒ සියල්ල කළමනාකරණය කරගැනීමටත් වගකීම් සහගතව නිවැරදි තොරතුරු බෙදාගන්නා ඔබේ සේවය අපට අතිශය වැදගත් වනවා.

ඒ වගේම මෙම හදිසි අවස්ථාව තුළ සෑම අංශයක්ම සම්බන්ධීකරණය කළ අධ්‍යාපන අමාත්‍යාංශයේ ලේකම්වරයාට මගේ හෘදයාංගම ස්තූතිය පළ කරනවා.

විභාග කොමසාරිස් ජනරාල්තුමියට, නියෝජ්‍ය කොමසාරිස් ජනරාල්වරුන්ට සහ විභාග දෙපාර්තමේන්තුවේ සම්ස්ත කාර්ය මණ්ඩලයට ද මගේ කෘතඥතාව පළ කරනවා. විභාග පත්‍රිකා ආරක්ෂා කිරීමට, සම්පූර්ණ කරන ලද පිළිතුරු පත්‍ර ආරක්ෂා කිරීමට, විභාග මධ්‍යස්ථාන සුරක්ෂිත කිරීමට සහ විභාග ක්‍රියාවලියේ අඛණ්ඩතාව පවත්වා ගැනීමට, ඉතාමත් දුෂ්කර තත්ත්වයන් යටතේ වුවද ඔවුන් දරන නොපසුබට උත්සාහය ඔවුන්ගේ වෘත්තීයභාවය සහ කැපවීම පිළිබඳ සැබෑ සාක්ෂියක් වනවා.

මේ අවස්ථාවේ මම සිහිපත් කළ යුතුයි තලවකැලේ සුමන මහා විද්‍යාලයේ පවත්වාගෙන යන ප්‍රාදේශීය එක් රැස් කිරීමේ මධ්‍යස්ථානයේ සහකාර සම්බන්ධීකරණ නිලධාරිතුමා රාජකාරියේ නිරතව සිටියදී ඔහුගේ පවුලේ බිරිද, දරුවන් ඇතුළු සියලු දෙනා එම ප්‍රදේශයේ සිදු වූ නාය යාම හේතුවෙන් ජීවිතක්ෂයට පත් වුණා. එය ඉතා සංවේගජනක සිදුවීමක්.

ඒ හා සමානව, අපගේ පාසල් ආරක්ෂා කිරීමට, බලපෑමට ලක් වූ පවුල්වලට සහාය වීමට සහ විභාග කටයුතු බාධාවකින් තොරව සිදු කරන බව සහතික කිරීමට දිවා රෑ නොබලා වැඩ කළ ගුරු - විදුහල්පති සහ කාර්ය මණ්ඩලය, පළාත් අධ්‍යාපන ලේකම්වරුන්ට, පළාත් අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන්ට සහ සියලුම පළාත් සහ දිස්ත්‍රික් අධ්‍යාපන බලධාරීන්ට මම මගේ අවංක කෘතඥතාව පළ කරනවා. අපදාව මධ්‍යයේ වුවද, ඔබගේ කැපවීම ආදර්ශමත් වනවා.

සහන කටයුතු සම්බන්ධීකරණය කළ, වේගවත්ව සන්නිවේදනය කරමින් තොරතුරු කළමනාකරණය කළ සහ සෑම අභියෝගයකටම ක්ෂණිකව ප්‍රතිචාර දැක්වූ විභාග දෙපාර්තමේන්තුවේ සහ අධ්‍යාපන අමාත්‍යාංශයේ කාර්ය මණ්ඩලය මගේ ගෞරවය පුද කරනවා.

උසස් අධ්‍යාපන අංශයේ, වෘත්තීය අධ්‍යාපන අංශයේ සහ සියලුම අනුබද්ධ ආයතනවල ආයතන ප්‍රධානීන්ට සහ කාර්ය මණ්ඩලයට සිය දායකත්වය වෙනුවෙන් මම ස්තූතිවන්ත වෙනවා. මෙම අර්බුදය තුළ සම්පත්, පහසුකම් සහ පුහුණු කාර්ය මණ්ඩලය සැපයීමට ඔබගේ සහයෝගය, නම්‍යශීලීභාවය සහ සූදානම සැබෑ ජාතික සහයෝගීතාවය පිළිබිඹු කරනවා. ඒ වගේම විශේෂයෙන් මතක් කළ යුතුයි විශ්වවිද්‍යාලවල සහ උසස් අධ්‍යාපන ආයතනවල ශිෂ්‍ය සංගම් නියෝජිතයින් දැක්වූ සහයෝගය පිළිබඳව.

මෙම කාල පරිච්ඡේදය තුළ අප දැරූ වැදගත්ම වගකීමක් වූයේ අපගේ සිසුන්ට අඛණ්ඩ අධ්‍යාපනය සහතික කිරීම සහ මානසිකව ඔවුන් යථාවත් කිරීමයි. ඒ සඳහා ඔබ සියලු දෙනාගේම සහයෝගය ඉදිරියටත් බලාපොරොත්තු වෙනවා. ඒ සඳහා රජයක් ලෙස අප වගකීම් සහගතව පෙනී සිටිනවා

අමාත්‍යාංශ, දිස්ත්‍රික්ක, පළාත්, පාසල් සහ විශ්ව විද්‍යාල හරහා සිදු කරන මෙම සාමූහික උත්සාහය විසින් අපේ අධ්‍යාපන පද්ධතිය හුදෙක් පද්ධතියක් පමණක් නොව එකම පවුලක් බව ඔප්පු කරනවා. අධ්‍යාපන අමාත්‍යවරයා වශයෙන්, මෙම දැවැන්ත ජාතික කර්තව්‍යයට දායක වූ සෑම පුද්ගලයෙකුම මම අගය කරනවා.

සැමවිටම අප පවසන පරිදි, අපේ ශක්තිය අපේ රටේ පුරවැසියන්. ඔවුන්ගේ සුවිශේෂී කාරුණික හදවත්. අනිකා වෙනුවෙන් සහකම්පනයෙන් යුතුව ඕනෑම අභියෝගයකට මුහුණදෙන උදාර මිනිස්කම් සහිත ඒ පුරවැසියන්ගේ හදවත් ගැන අපි නැවත නැවතත් ආඩම්බර වෙනවා. මහා විපතක් ඉදිරියේත්, ප්‍රාණවත්ව, සක්‍රියව, මිනිසත්කමින් යුතුව, කාරුණිකව වෙහෙසෙන ඒ සියල්ලන් රටක් වශයෙන් අපේ ශක්තිය කුමක්දැයි මුළු ලොවටම කියා දෙමින් සිටිනවා.

තමන්ගේ සියලු අසීරුතාවයන් අතරත් “මම මට පුළුවන් දෙයක් දෙනවා” කියමින් පැමිණ පැනඩොල් පැකට් දෙකක් පරිත්‍යාග කළ ඒ “අම්මා”ගේ සහකම්පනය, අපේ ජාතියේ කරුණාව, උදාරකම, සහ එකමුතුකම මනාව පෙන්වන උදාහරණයක්.

මේක අසීරු මොහොතක්. අසීරුවෙන් ජයගත යුතු අභියෝගාත්මක ගමනක් අප ඉදිරියේ තිබෙනවා. එකිනෙකා කෙරෙහි කරුණාවෙන්, ආදරයෙන්, සහ අවබෝධයෙන් කටයුතු කිරීම මේ මොහොතේ අත්‍යවශ්‍යයි. ජීවිත අහිමිවූ සියල්ලන් වෙනුවෙන් අපේ හදවත් වල නැගෙන වේදනාව සහ කම්පනය කිසිදා අපේ හදවතින් ඈත් නොවේවි. නමුත් අපි ඉදිරියට යායුතුමයි. මේ දැවැන්ත ව්‍යසනයෙන් හිස ඔසවා නැගී සිටිය යුතුමයි. එකමුතුකමින්, ධෛර්යයෙන්, අලුත් ආකල්පවලින්, යුතුව අලුත් පණක් සහිතව අපි නැගී සිටිය යුතුමයි.

මේ මොහොතේ රජය විසින් ඉටුකරන භාරධුර කාර්යය කෙරෙහි විශ්වාසය තබා ඒ සමග එකතුවන සියලු දෙනාටම මම නැවත වරක් ස්තුතිවන්ත වනවා. ඒ වගේම මේ මොහොතේ සියලු පක්ෂ පාට පසෙක දමා මේ රට යලි ගොඩනැගීම වෙනුවෙන් එකතුවී වැඩ කරමු කියන ඉල්ලීමත් මම මේ මොහොතේ අපේ සියලුම පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ට ඉදිරිපත් කරන්න කැමතියි.

විදුලි බිඳවැටීම්, ජලය සහ ආහාර ලබා ගැනීමේ අපහසුතා ඇතුළු අප්‍රමාණ බාධා හමුවේත්, ඔබ පෙන්වූ ඉවසීම, අභියෝග වලට මුහුණ දීමේ ශක්තිය, අපේ සමස්ථ ජාතියේම ශක්තිය බව මම තරයේ විශ්වාස කරනවා.

මෙම අසීරු කාලය පුරා, නොයෙක් ආකාරයෙන් ඔබ දැක්වූ දායකත්වයට, ඔබ පෙන්වූ ධෛර්යයට, සහ එකමුතුකම වෙනුවෙන් සිය ගෞරවය සහ ස්තූතිය පළ කරන බවද අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

ඉතිහාසය සහ චිත්‍ර කලාව විෂයයන් තුළින් දමිළ ඉතිහාසය සහ කලා කෘති පිළිබඳ කරුණු ඉවත් කර නැහැ. - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

ඉතිහාසය සහ චිත්‍ර කලාව විෂයයන් තුළින් දමිළ ඉතිහාසය සහ කලා කෘති පිළිබඳ කරුණු ඉවත් කර නොමැති බව අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් වන වෛද්‍ය පද්මනාදන් සත්‍යලිංගම් සහ ශිවඥානම් ශ්‍රීධරන් යන මන්ත්‍රීවරුන් විසින් ඉදිරිපත්කළ ප්‍රශ්න වලට පිළිතුරු ලබා දෙමින් අග්‍රාමාත්‍යතුමිය මේ බව පැවසුවාය.

මෙහිදී වැඩිදුරටත් අදහස් දැක් වූ අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය,

යාපනය දිස්ත්‍රීක්කයේ එළුවතිව් දූපතේ පාසල් දෙකක් තිබෙනවා. 1999 සිට විභාගමධ්‍යස්ථානයක් ලෙස මේ පාසල භාවිත කර නැහැ. මේ පාසල් වල දරුවන් සාමාන්‍ය පෙළ සඳහා පෙනී සිටියේ කයිටිස් දූපතේ පිහිටි සෙන් ඇන්තනී විද්‍යාලයේ විභාගමධ්‍යස්ථානයේදී යි. එළුවතිව් දූපතේ පිහිටි පාසල් වල විභාගයට පෙනී සිටින දරුවන් ප්‍රමාණය ඉතා සීමිත පිරිසක් නිසා විභාගමධ්‍යස්ථානයක් ලෙස පවත්වාගෙන ගිහින් නැහැ. සංඛ්‍යාත්මකව ගත්තොත් 2022 දී ළමයි 10ක්, 2023 දී ළමයි 08ක් 2024 දී ළමයි 05ක් ලෙස තමයි සාමාන්‍ය පෙළ සඳහා ඉල්ලුම් කර තිබෙන්නේ. ඒ නිසා විභාග මධ්‍යස්ථානයක් ලෙස මේ පාසල් භාවිත කර නැහැ ආසන්නතම විභාග මධ්‍යස්ථානය වෙත මේ දරුවන් යොමු කර තිබෙනවා. ඒ වගේ ම ඒ දරුවන්ට කයිට්ස් දූපතේ පිහිටි විභාග මධ්‍යස්ථානවෙත යන්න අවශ්‍ය ප්‍රවාහන පහසුකම් පිළිබඳ අපි අවදානය යොමු කරනවා.

ඒ වගේම දැනට ක්‍රියාත්මක ඉතිහාසය විෂය තුළ දමිළ රජවරු පිළිබඳ අන්තර්ගත කර තිබෙනවා. 10 වන ශේණියේ 07 වන පාඩමේ ඒ වෙනුවෙන් පරිච්ඡේදයක් වෙන් කර තිබෙනවා. ඒ වගේම 10 වන ශෙණියේ 10 වන පාඩමේ යාපනය රාජධානිය පිළිබඳ පරිච්ඡේදයක් ඇතුලත් කර ඇති අතර එහි සංගිලි රාජ්‍ය සමය පිළිබඳ අන්තර ගත කර තිබෙනවා. නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ යටතේ අපි දැනට 6 වන වසරට ඉතිහාසය පිලිබඳ අලුත් නිර්දේශයන් සකස් කර තිබෙනවා එහි සංගිලි රාජධානියේ පින්තූරයක් ද ඇතුලත් කර තිබෙනවා. ඉතිහාසය විෂයක් ලෙස ඉගැන්වීමේදී සිංහල සහ දමිළ ලෙස බෙදා වෙන් කර ඉගැන්වීම් සිදු කරන්නේ නැහැ. ශ්‍රී ලාංකික ඉගිහාසය ලෙස විවිධ කාල පරිච්ඡේද වල රජවරු සහ රාජ්‍යයන් පිළිබඳ උගන්වනවා. ශ්‍රී ලංකාවේ ඉතිහාසය සුරක්ෂිත කිරීමේ සහ ප්‍රදර්ශනය කිරීමේ පුරෝගාමියා ලෙස ජාතික කෞතුකාගාර දෙපාර්තමේන්තුව විසින් දමිළ ඉතිහාසය ප්‍රදර්ශනය කිරීම සඳහා ප්‍රදර්ශන මැදිරිතුළ ඉඩකඩ වෙන් කර තිබෙනවා. කොළඹ කෞතුකාගාරයේ ශිලා පුරාවස්තු මැදිරි තුළ දමිළ ටැම් ලිපි හතරක් සහ දමිළ ශිලා ලිපි දෙකක් ප්‍රදර්ශනය කර තියෙනවා. මේ ලිපි ඉන්දියාවේ රාජ රාජ සහ රාජේන්ද්‍රාධිරාජයන්ගේ මෙරට නියෝජිතයන්ගෙන් සහ ආර්ය චක්‍රවර්ති ආර්යයන් විසින් පිහිටුවා ඇති ලිපි. ඒ වගේම කොළඹ ජාතික කෞතුකාගාරයේ ඇති දමිළ සෙල්ලිපි පිලිබඳ තොරතුරු ඇතුළත් ග්‍රන්ථයක් මහාචාර්ය එස් පද්මනාදන් විසින් රචනා කර ඇති අතර දෙපාර්තමේන්තුවේ ප්‍රකාශන අංශය විසින් අලෙවි කිරීමද සිදු කරනවා. ඒ වගේම හින්දු ආගමට අයත් ශිව, පාර්වති, නටරාජ්, සුන්දර මූර්ති ඇතුළු තවත් බොහෝ ශෛලමය සහ ලෝකඩ පිළිම සහ මූර්ති ගණනාවක් ප්‍රදර්ශනය කර තිබෙනවා. මීට අමතරව යාපනය රාජධානියේ භාවිත වූ සේතු කාසි එකතුවක් සුරක්ෂිතව ගබඩා කර තිබෙනවා. කොළඹ ජාතික කෞතුකාගාරය සතු සංගම් යුගයට අයත් චෝල සහ පාණ්ඩ්‍ය කාසි පිළිබඳ ආචාර්ය ක්‍රිෂ්ණමූර්ති සහ සෙනරත් වික්‍රමසිංහ විසින් රචිත ග්‍රන්ථයක් ද සංරක්ෂිත කර තිබෙනවා.

චිත්‍ර කලාව විෂය ප්‍රායෝගික ක්‍රියාකාරකම් සහ විශිෂ්ට කලා කෘති අධ්‍ය්‍යනය කිරීම්වලින් යුතු විෂයක්. මේ විෂය සකස් කිරීමේදී විශේෂයෙන් සර්ව ජාතික, සර්ව ආගමික, සර්ව භෞමික කලා කෘතීන් ඇතුලත් ජාත්‍යන්තර ප්‍රමිතීන් සළකා බැලුවා. චිත්‍ර කලාව විෂය පිලිබඳ ප්‍රතිසංස්කරණ වලදි මේ ගැන වඩාත් අවධානයක් යොමු කර ඇති බවද අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஏற்ப, முதலீட்டுப் பின்னணியையும் சூழலையும் உருவாக்கி, தந்திரோபாய ரீதியிலும் சரியான கொள்கைகளின் அடிப்படையிலும் செயற்பட வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

ஏற்பட்டுள்ள நிலைமைகளைச் சமாளிக்க, தந்திரோபாய ரீதியில் செயற்பட வேண்டும் என்றும், வரவுசெலவுத் திட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு முதலீட்டுப் பின்னணியையும் சூழலையும் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சரியான கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு ஷங்ரிலா (Shangri-La) விடுதியில் டிசம்பர் 02ஆம் திகதி நடைபெற்ற ’இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு 2025’ (SRI LANKA ECONOMIC AND INVESTMENT SUMMIT 2025) இல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் உலகளாவிய ரீதியில் உள்ள சுமார் 100 முதலீட்டாளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் ’இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு 2025’ நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் தெரிவித்ததாவது:

"இலங்கைக்காக முன்மொழியப்பட்டிருக்கும் எதிர்வு கூறலுக்கு அமைய, முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம். எம்மால் மீண்டும் பின்னோக்கிச் செல்ல இயலாது. நாட்டைப் பின்னோக்கிச் செல்லவிடவும் முடியாது. ஆகையால், நாம் ஏற்படுத்திக் கொண்ட இலக்குகளை அடைவதே எமது இலக்காகும்.

தற்போது நிலவுகின்ற சூழ்நிலைகளும் வாய்ப்புகளும் மாறும்போது, நாமும் அதற்கு இணங்கிச் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, ஏற்பட்டுள்ள மற்றும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமைகளைச் சமாளிப்பதற்காக, நாம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஆயினும், அரசாங்கத்தின் இலக்குகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. வரவுசெலவுத் திட்ட உரையின்போது, ஜனாதிபதி அவர்கள் நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தி, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல், டிஜிட்டல் மயமாக்கல், உற்பத்தித்திறன் மிக்க பொருளாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தினார்.

அந்த இலக்குகளை அடைவதற்குச் சரியான பாதையில் பயணிக்க வேண்டுமென நாம் உறுதிபூண்டுள்ளோம்.

அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் பிரதான தந்திரோபாய முன்மொழிவுகள் குறித்துப் பேசியது. வர்த்தகம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மறுசீரமைப்புச் செயல்முறைகளுக்கான ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பான முன்மொழிவுகளும் அதில் உள்ளடங்குகின்றன. அதற்கான பல சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கும் பணியை நாம் ஏற்கெனவே ஆரம்பித்து இருக்கின்றோம். அவை அடுத்த வருட ஆரம்பத்தில் முன்வைக்கப்பட உள்ளன. அவற்றைத் தாமதப்படுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. உண்மையில், நாம் இன்னும் வேகமாக முன்னோக்கிச் செல்வோம், ஏனெனில் அது எமது மீண்டும் கட்டி எழுப்பும் தந்திரோபாயத்தின் ஓர் அங்கமாகும்.

பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்குத் தேவையான சூழல் உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பதை நாம் உறுதிப்படுத்துவோம். ஆகையினால், எதையும் பிற்போடுவதில் எண்ணம் எமக்கு இல்லை.

ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமைக்கு ஏற்ப தந்திரோபாயத்துடன் செயற்பட வேண்டி இருக்கின்றது. அத்தோடு, எமது வரவுசெலவுத் திட்டத்திலும் சில பொருத்தங்களை ஏற்படுத்த வேண்டி வரலாம்.

இந்த அழிவில் இருந்து மீண்டு வர முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நாம் எமது பொருளாதாரத்தை வலுவானதாகவும் தாக்குப் பிடிக்கக் கூடியதாகவும் வைத்திருக்க வேண்டும். இவை வெறும் ’அலங்காரத்திற்காக செய்யப்படும் மேலதிக விடயங்கள்’ அல்ல. பொருளாதாரத்தை நிலையானதாகவும், போட்டியிடக் கூடியதாகவும் வைத்திருப்பதற்கு இவை அடிப்படைக் காரணிகளாகும். ஆகையினால், இந்த அத்தியாவசிய விடயங்களைச் செய்து ஆகவேண்டும். அதற்குத் தேவையான நிதியைத் தேடிக்கொள்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இதன் போது நிதியை விடச் சரியான கொள்கைகளே மிகவும் முக்கியமாகின்றன.

உதாரணமாக, ஒற்றைச் சாளர முறைமையை (single window) முன்னெடுத்துச் செல்வதற்கு அதிக செலவு ஏற்படாது. அது ஒரு முகாமைத்துவம் பற்றிய விடயம். ஆதலால், கொள்கைகளைச் சரியாக வகுப்பதே மிக முக்கியமானதாக அமைகின்றது. அதேபோல, அனைவரும் சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்குக் கட்டுப்படுவதை உறுதிப்படுத்த அரசியல் தலையீடும் முக்கியமானதாக அமைகின்றது.

எமது நாட்டில் கல்வித் துறையில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றத்தை நான் ஒரு மறுசீரமைப்பு என்பதைவிட ’மாற்றம்’ (transformation) என்று குறிப்பிட விரும்புகிறேன். காரணம், நாம் தற்போதுள்ள முறைமையை மறுசீரமைப்பதற்குப் பதிலாக, ஒரு புதிய முறைமையை அறிமுகப்படுத்தவே திட்டமிடுகிறோம்.

இந்த மாற்றம் ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டது. அவை: மதிப்பீட்டு மற்றும் விசாரணை முறைகளின் மறுசீரமைப்பு, கல்வி நிர்வாகத்தின் மறுசீரமைப்பு, பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியனவே ஆகும். நாம் முன்மொழியும் இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கின்றன. முதலாவது, மதிப்பீட்டு முறைமையின் மாற்றம். தற்போது எமக்கு இருப்பது பரீட்சையை இலக்காகக் கொண்டு கற்பித்தல் நடைபெறும், பெரும்பாலும் பரீட்சையை மையமாகக் கொண்ட முறைமையாகும். இதனால், மாணவர்கள் பரீட்சைகளில் சித்தி அடைவதற்காகவே கற்கிறார்கள்.

நாம் இதை பாடசாலை அடிப்படையிலான, தொடர்ச்சியான மதிப்பீட்டு முறைமையாக மாற்ற விரும்புகிறோம். இதன்மூலம் போட்டிப் பரீட்சைகள் மீதான கவனம் குறையும். அதேநேரம், கற்றலை ஓர் அனுபவமாகவும் செயற்பாடாகவும் கருதுவதில் அதிக கவனம் செலுத்தப்படும். கட்டக முறைகள் (Modular Systems), பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகளை அறிமுகப்படுத்தவும், பரீட்சை பற்றிய சுமையைக் குறைக்கவும் நாம் திட்டமிடுகிறோம். இது கல்வியில் ஒரு பாரிய மாற்றம். இதற்கு, கற்றலை நோக்கும் விதத்தில் ஒரு மனப்பாங்கு மாற்றமும் தேவைப்படுகிறது.

நாம் ஏற்படுத்த இருக்கும் இரண்டாவது பாரிய மாற்றம், தொழிற்கல்வியை (Vocational Education) முதன்மை கல்வியில் ஒரு முறைசார் பாடத்திட்டமாகத் தெரிவு செய்யத்தக்க பாடமாக அறிமுகப்படுத்துவதே ஆகும்.

தற்போது, தொழிற்கல்வி என்பது ’தோல்வியடைந்தவர்களின் தெரிவு’ என்றே கருதப்படுகிறது. எவரேனும் பரீட்சையில் தோல்வியடைந்தால் அல்லது வகுப்பறையின் பின்வரிசையில் இருக்கும் மாணவராக இருந்தால், அவர்கள் மாத்திரமே தொழிற்கல்விக்கு அனுப்பப்படுகிறார்கள். மேலும், பொதுவாகத் தொழிற்கல்வி பெற பாடசாலையில் இருந்து விலக வேண்டியுள்ளது. நாம் முன்மொழிவது என்னவென்றால், தரம் 6 இலிருந்தே தொழிற்கல்வியைத் முதன்மை கல்வியின் ஒரு பகுதியாக மாற்றுவதுதே ஆகும். இதன் மூலம், அனைத்து மாணவர்களும் தொழில்சார் துறைகளை அடையாளம் காண முடியும். அத்துடன், கல்வியின் ஒவ்வொருப் படியிலும் ஒரு தொழில்சார் பாதையைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். இது ஜேர்மன் முறைமைக்கு ஓரளவுக்குச் சமமானது. அங்கு பாடசாலையில் கற்கும் காலப்பகுதியைப் போலவே, தொழில்நுட்பப் பயிற்சிக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் ஒதுக்கப்படும்.

அதேபோல, நாம் வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் தனியார் துறையுடன் மிக விரைவில் கலந்துரையாட எதிர்பார்க்கிறோம். மேலும், திறன் தேவைப்படும் துறைகளை அடையாளம் காண, தனியார் துறையிடம் இருந்து எமக்குத் தொடர்ச்சியான தகவல்கள் தேவைப்படுகின்றன.

எமது மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி (Internships) வழங்குவதற்கும், தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்கும் தனியார் துறை பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். பாடவிதானங்களைத் தயாரிப்பதற்கும் அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

அத்தோடு, நான் இதையும் குறிப்பிட வேண்டும், எமது கல்வி மறுசீரமைப்பின் நோக்கம் வெறுமனே தொழில் சந்தைக்காக ஒருவரை உருவாக்குவது மட்டும் அல்ல. குறிப்பாக, எமக்குத் தேவைப்படுவது ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதே. பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்வது ஒரு நல்ல குடிமகனாக இருப்பதன் ஒரு பகுதியே ஆகும். ஒரு பணியாளராக, தொழில்முனைவோராக அல்லது ஆக்கப்பூர்வமான ஒருவராக நாட்டை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய குடிமக்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

’இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு 2025’, ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி குழுமம், வெளிவிவகார அமைச்சு, இலங்கை வர்த்தகத் திணைக்களம், வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பங்குதாரர்கள் பலரின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை நெதர்லாந்து தூதுவர் சந்தித்தார்

நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ Wiebe Jakob De Boer அவர்கள், 2025 டிசம்பர் 02ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

பல தசாப்த கால இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான நீண்டகால உறவு குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இரு தரப்பினரும் இந்த பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினர்.

சமீபத்திய அனர்த்தத்திலிருந்து இலங்கை மீண்டு வர ஆரம்பித்திருக்கும் இந்தச் சவாலான காலப்பகுதியில், இரு நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்த பாதிப்புகளைக் குறைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து பிரதமரும் தூதுவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உறுதியான மீள்கட்டுமானம், மேம்பட்ட நீண்டகால திட்டமிடல் மற்றும் தேவைப்படும் உதவிகள் ஆகியன குறித்தும் அவர்கள் இதன்போது கவனம் செலுத்தினார்கள்.

இலங்கையில் சேதமடைந்த பல பாலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அவசரத் தேவை ஒரு முக்கியத் தேவையாக இருப்பதால், நாடு முழுவதும் உள்ள அத்தகைய பாலங்களைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்க நெதர்லாந்து விரும்புவதாக தூதுவர் தெரிவித்தார்.

மேம்பட்ட வெள்ள முகாமைத்துவம், இலக்கு வைக்கப்பட்ட முதலீடுகள் மற்றும் உள்ளக அபிவிருத்தி போன்ற துறைகளில் கூட்டு முயற்சிகள் நிலையான முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்தச் சந்திப்பில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சப்புத்தந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகாவத்த, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் திவங்க அத்துரலிய ஆகியோர் இலங்கைத் தூதுக்குழுவில் இடம்பெற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கல் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் தேசியத் தேவையாகக் கருதிச் செயற்பட வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அவசர அனர்த்தங்கள் ஏற்பட்ட கணத்திலிருந்து தொடர்ந்தும் முப்படையினர், பொலிஸார், அரச அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொது மக்கள் வழங்கும் ஒத்துழைப்பை வெகுவாகப் பாராட்டுகிறேன்

அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை மீண்டும் குடியேற்றுதல் மற்றும் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் போலவே, அனர்த்தங்களால் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் என்பவற்றை தேசியத் தேவையாகக் கருதிச் செயற்பட வேண்டும் என்றும், அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டதிலிருந்து, முப்படையினர், பொலிஸார், அரச அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொது மக்கள் வழங்கும் ஒத்துழைப்பைப் வெகுவாகப் பாராட்டுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டச் செயலகத்தில் இன்று,2025 டிசம்பர் 02 நடைபெற்ற கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை, வெள்ள நிலைமை தணிந்து வருவதற்கு ஏற்ப படிப்படியாக மீண்டும் நிரந்தர வசிப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது சுமார் 110 இடம்பெயர்வு முகாம்களில் மக்கள் தற்காலிகமாகத் தங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். கொழும்பு மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒரு நாளைக்கு சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சமைத்த உணவுப் பொதிகளை வழங்க வேண்டியுள்ளதாகவும், அரச நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளினால் உரிய உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றும், கொழும்பு மாவட்டத்திற்குத் தேவையான குடிநீர் விநியோகத்தைத் தொடர்ச்சியாக வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

வெள்ளம் வடிந்த பகுதிகளில் வீடுகளைச் சுத்தம் செய்து, மீண்டும் குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனர்த்தங்களுக்கு உள்ளான பகுதிகள் போலவே, அதை விட அதிகமாக அனர்த்தங்களுக்கு உள்ளான பகுதிகள் குறித்தும் கவனம் செலுத்தி, கொழும்பு மாவட்ட அனர்த்தக் குழுவாக அந்தப் பகுதிகளுக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாகத் தடைப்பட்ட வீதிகளை மீண்டும் திறந்து, சேதமடைந்த வீதிகளை அடையாளம் கண்டு உடனடியாகப் புனர் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல, மக்களுக்குத் தேவையான குடிநீரை உடனடியாக வழங்குவதும் மிகவும் அவசியமாக இருக்கின்றது. மின்சாரத் தடைகளைச் சீர்செய்வதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உதவிகளை வழங்கும் போது, மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் சரியாக ஒருங்கிணைத்து, அனர்த்தங்களுக்கு உள்ளான அனைவருக்கும் உதவிகளை வழங்க வேண்டும். மீண்டும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து முறையாக மதிப்பீடுகளை மேற்கொண்டு, முன்பு ஏற்பட்ட தவறுகள் மீண்டும் ஏற்படாத வகையில் அபிவிருத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். டிசம்பர் 16ஆம் திகதி குறைந்தளவு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த, அனைத்துப் பகுதிகளிலும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த தகவல்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். அனர்த்தங்களுக்கு உள்ளான ஏனைய பகுதிகளில் பிரதேச மட்டத்தில் ஆராய்ந்து பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும். அதற்காகப் பாடசாலைகளின் நிலைமை, பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் குறித்து ஒரு மதிப்பீட்டைப் பெற்றுக்கொள்வதும் அவசியம். அனர்த்த நிலைமையின்போது முப்படையினர், பொலிஸார், அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள் போலவே பொது மக்கள் வழங்கும் ஒத்துழைப்பை வெகுவாகப் பாராட்ட இதை ஒரு வாய்ப்பாகக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் குடியேறக்கூடிய 100இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா நிதியுதவி கொழும்பு மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. மீண்டும் தமது வீடுகளில் குடியேறக்கூடிய மக்கள் வீடுகளைச் சுத்தம் செய்வதற்காகத் தமது பிரதேச செயலகங்கள் ஊடாக உரிய நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தக் கூட்டத்தில் பிரதிச் சபாநாயகர் மொஹமட் ரிஸ்வி சாலி, பிரதி அமைச்சர்களான ஹர்ஷன நாணாயக்கார, எரங்க குணசேகர, கௌசல்யா ஆரியரத்ன, சுனில் வட்டகல, சதுரங்க அபேசிங்க, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, முஜிபூர் ரஹ்மான், எஸ். எம். மரிக்கார், மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக்க குமார, வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், மின்சார சபை, பொலிஸ், முப்படை உள்ளிட்ட அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் பங்கேற்றதுடன், கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர்கள் Zoom ஊடாக கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகநலன்களை விசாரிப்பு

"இடம்பெயர்ந்துள்ள மற்றும் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து உடனடியாக அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுங்கள்"

பிரதமர் அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வலியுறுத்தல்

முழு நாட்டையும் பாதித்த "திட்வா" சூறாவளியினால் களனி ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த இஹல போமிரிய மற்றும் அதனை அண்மித்த பிரதேச மக்களின் சுகநலன்களை விசாரிப்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று,2025 நவம்பர் 29 அப்பிரதேசத்திற்குச் சென்றார்.

அங்கு, போமிரிய கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்திருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் சுகநலன்களைப் பற்றி பிரதமர் விசாரித்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் தற்போது எதிர்நோக்கும் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன், உணவு, சுகாதார உபகரணங்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக வழங்குவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் நிலைமை குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். அத்துடன், ஏற்பட்டுள்ள தேசியப் பேரழிவைப் புரிந்துகொண்டு, இடம்பெயர்ந்த மக்களுக்காக நிவாரணங்களை வழங்குவதிலும், அவர்களைப் பாதுகாப்பதிலும் உழைக்கும் அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மற்றும் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து உடனடியாகத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்குமாறு அரசியல் தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது இஹல போமிரிய மற்றும் அதனை அண்மித்த வெள்ளத்தால் இடம்பெயர்ந்த சுமார் நூறு குடும்பங்களைச் சேர்ந்த 320 பேர் இஹல போமிரிய கனிஷ்ட வித்தியாலயத்தில் தங்கியிருக்கின்றனர். இந்த மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றத் துரிதமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர்.

அதனையடுத்து, கொலன்னாவ பிரதேசத்தின் அனர்த்த நிலைமை குறித்து ஆராய்வதற்காகச் சென்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, முல்லேரியா கல்வானை பழைய இராஜமஹா விகாரை மற்றும் வெல்லம்பிட்டி வித்தியாவர்த்தன வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தங்குமிடங்களுக்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.

அதன் பின்னர் கொலன்னாவப் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த பிரதமர், அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நிவாரண வேலைத்திட்டம் குறித்தும், உணவு மற்றும் சுகாதார உபகரணங்களை உடனடியாக மக்களுக்கு வழங்கிவரும் செயல்திட்டம் குறித்தும் விசாரித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார், கொழும்பு மாவட்டச் செயலாளர், கொலன்னாவ பிரதேச செயலாளர், மாநகர மேயர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு