பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

சிறுவர் பாதுகாப்பு வெறும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய.

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான விடயமாகும்.

சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்றும், குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக கருதாமல் பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது மிகவும் சரியான கருத்து என்றும் அதேநேரத்தில் அது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான விடயம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்துகிறார்.

ஜூன் 17ஆம் திகதி கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் "இலங்கையில் பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரித்தல்" என்ற தலைப்பின் கீழ் உலக வங்கி குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றுகையில் பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

சிறுவர் பராமரிப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு அதிகமாக நாட்டின் பொருளாதாரத்துடன் இணைவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி அவர்களுக்கு தொழிலாளர் படையில் உயர்ந்த முன்னேற்றம் கிடைக்கும் வழியை திறப்பது எவ்வாறு என்பது பற்றி விவாதிப்பது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இங்கு மேலும் கருத்துக்களை தெரிவிக்கையில் பிரதமர் வலியுறுத்தியது, சம்பளம் பெற்றாலும் அல்லது பெறாவிட்டாலும் தனது உழைப்பை வழங்கும் பெண் பொருளாதாரத்தின் மையமான காரணியாகும். ஆனால், சமூக ரீதியாக அவருக்கு உள்ள பல்வேறு தடைகளை எதிர்கொண்டு பெண்களுக்கு தொழிலாளர் படையுடன் இணைவதற்கு உள்ள வாய்ப்பு பெரிதும் வரையறுக்கப்பட்டுள்ளது. புள்ளிவிபரங்களின் படி 32% ஆக உள்ள நமது நாட்டின் பெண் தொழிலாளர் படை பங்களிப்பு

பிரதமரின் ஊடகப் பிரிவு

The High Commissioner of India to Sri Lanka, H.E. Santosh Jha, hosted a special reception for the Women Parliamentarians’ Caucus of Sri Lanka on 16 June 2025 at India House.

The event served as a platform to further strengthen parliamentary ties and promote collaboration on women’s empowerment and gender equality between Sri Lanka and India.

The reception was attended by the Prime Minister of Sri Lanka, Dr. Harini Amarasuriya; the Minister of Women and Child Affairs and the chairperson of the women parliamentarian causus, Ms. Saroja Savithri Paulraj, along with several esteemed Members of the Women Parliamentarians’ Caucus, representing both the government and the opposition.

Prime Minister’s Media Division

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும்... - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் வாழ்க்கை முறையாக மாற வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், Clean Sri Lanka என்பது நாட்டில் உள்ள அனைவரினதும் வாழ்க்கை முறையாக (lifestyle) மாற வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி அமைச்சு மற்றும் Clean Sri Lanka திட்டத்தின் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் இன்று (16) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அதிகாரிகள் தங்கள் அனுபவங்களை உதாரணங்களுடன் பிரதமரிடம் முன்வைத்தனர்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் இப்போது செய்ய முயற்சிப்பது சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. எனவே, இதை இன்னொரு திட்டமாக அவசர அவசரமாக செய்ய வேண்டிய அவசியமில்லை. எமக்கு இன்னும் காலம் இருக்கிறது.

Clean Sri Lanka என்பது வெறுமனே சுத்தம் செய்வது மட்டுமல்ல. Clean Sri Lanka என்பது நாம் வாழும் சூழலை, நமது சிந்தனை முறை, அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளுடன் சேர்த்து தூய்மையாக வைத்திருப்பது பற்றியதாகும்.

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் வாழ்க்கை முறையாக (lifestyle) இருக்க வேண்டும். நமது எதிர்கால சந்ததியினரை, குறிப்பாக மாணவர் சமூகத்திற்கு, அதைப் பழக்கப்படுத்த விரும்புகிறோம், அதனால்தான் பாடசாலைகளுக்கு lifestyle திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.

பாடசாலை பிள்ளைகள், பெற்றோர்கள், முப்படைகள் Clean Sri Lanka திட்டத்திற்கு தன்னார்வத்துடன் ஆதரவளிக்கும் பல தரப்பினரை ஈடுபடுத்துவதன் மூலம் ஏற்கனவே ஏராளமான திட்டங்கள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளன.

பாடசாலைகளை மையமாகக் கொண்டு இந்த திட்டங்களை அடுத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்களின் ஆதரவு தேவை.

அடுத்த முக்கியமான விடயம் என்னவென்றால், தேவைப்படும் போதெல்லாம், பாடசாலை முறைமைக்குள் நாங்கள் செயற்படுத்தும் Clean Sri Lanka திட்டத்தில் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளின் தேவைகள் குறித்து தொடர்புடைய தரப்பினரிடமிருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்வதாகும்.

குறிப்பாக, இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் அமைக்கப்படும் கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகளில் மாற்றுத்திறனாளி சமூகங்களின் வசதி மற்றும் தேவைகளுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் கழிப்பறைகள் உட்பட அனைத்திற்கும் ஒரே மாதிரி பேணப்பட வேண்டும். எல்லா ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்க முடியாது.

பாடசாலைகளில் Clean Sri Lanka திட்டத்தை செயற்படுத்தும்போது, சில நேரங்களில் தேவையான நிதியைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதற்கான தீர்வுகளை விரைவாக வழங்க எங்களால் முடியும்.

Clean Sri Lanka திட்டத்தை பாடசாலைகளுக்கு அப்பால் தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். இது ஒரு தனிநபரையோ அல்லது ஒரு குழுவையோ இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தற்காலிக திட்டம் அல்ல. முழு நாட்டையும் இலக்காகக் கொண்டு நடத்தப்படும் ஒரு பாரிய தேசிய திட்டத்தின் ஆரம்ப கட்டமாகும்.

"இந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டு, நமது தவறுகளையும் குறைபாடுகளையும் சரிசெய்து முன்னோக்கிச் செல்வோம்" என்று பிரதமர் மேலும் கூறினார்.

இந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சு மற்றும் Clean Sri Lanka திட்டத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைத்தல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூன் 16 ஆந் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைக்கும் பாதையில் இலங்கை பயணிக்கின்ற சூழ்நிலையில், சர்வதேச பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கலாநிதி கீதா கோபிநாத் இதன்போது கவனம் செலுத்தினார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் புதிய அரசாங்கம் பின்பற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்திறமான அணுகுமுறையை கலாநிதி கோபிநாத் பாராட்டியதுடன், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் அரசாங்கத்தின் முயற்சிகளில் சர்வதேச நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதார சீர்திருத்த சட்டகம், இலங்கையை போலவே நிதி மற்றும் கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்ளும் ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைகிறது என்றும் கலாநிதி கோபிநாத் குறிப்பிட்டார்.

அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், எரிசக்தி போன்ற மூலோபாயத் துறைகளில் நிலையான மற்றும் பெரிய அளவிலான முன்னேற்றங்களின் நீண்டகால நம்பகத்தன்மைக்கு இது மிகவும் முக்கியமானது என்பதால், இது குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.

நிர்வாகத்தை மேம்படுத்துதல், நிறுவனங்களை பலப்படுத்துதல் மற்றும் அரச மற்றும் அரச நிதி முகாமைத்துவத்தின் அனைத்து மட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல் ஆகியவை நிர்வாகத்தின் முன்னுரிமைகளாக உள்ளன என்றும், அனைத்து பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுப்பதற்கும், மக்களின் நலனில் கவனம் செலுத்துவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் சமூகப் பாதுகாப்பு பொறிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள தொழிற்படையை வலுவூட்டுவதற்கும் கல்வித் துறையில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

சமூக நீதியை முன்னேற்றுவதற்கும் பேண்தகு அபிவிருத்து இலக்குகளை அடைவதற்கும் கல்வி சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் பிரதமர் கூறினார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் தற்போதைய சீர்திருத்தத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்ததுடன், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கலாநிதி கோபிநாத் வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கலாநிதி மார்ட்டின் காஃப்மேன் (ஆலோசகர்), கலாநித கிருஷ்ணா ஸ்ரீனிவாசன், கலாநிதி பீட்டர் பூவர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம். பெரேரா மற்றும் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சுதேச சுற்றுலா சேவை வழங்குநர்களின் செயல்திறன் அதிகரிப்பு மூலம் சுற்றுலாத் துறை மேம்பாடு - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுதேச சுற்றுலா சேவை வழங்குநர்களின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் கிராமிய சுற்றுலாவை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட சுற்றுலா அபிவிருத்திக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூன் 16ஆம் திகதி கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் ’பட்டுப்பாதை ஒருங்கிணைப்பு மற்றும் வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற ’சீனா-இலங்கை-மாலைத்தீவு சுற்றுலா மன்றத்தின்’ அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

சுற்றுலாத் துறையை ஒரு பொருளாதார வளர்ச்சியாக மட்டுமன்றி, மக்களிடையேயான உறவுகள், கலாசாரப் புரிதல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புடன் கூடிய தெற்காசியப் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதே இந்த மன்றத்தின் முதன்மை நோக்கமாகும்.

சீனா அதன் பரந்த மற்றும் பன்மைத்துவ நிலப்பரப்புகள், பல நூற்றாண்டுகள் பழமையான தளங்கள் மற்றும் மாறுபட்ட நவீன நகரங்களுடன் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

மாலைத்தீவுகள் அழகிய பவளப்பாறைகள், தெளிந்த நீர்நிலைகள் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஓய்வு விடுதிகளைக் கொண்ட தீவுகளைக் கொண்டுள்ளது.

இலங்கை புனித நகரமான அனுராதபுரத்திலிருந்து சீகிரிய கோட்டை வரை, தெற்கின் அழகிய கடற்கரைகள் முதல் மத்திய மலைநாட்டின் பனி படர்ந்த தேயிலைத் தோட்டங்கள் வரை தனித்துவமான அனுபவங்களை வழங்குகிறது.

எமது நாட்டில் வருமானம் ஈட்டுவது மட்டுமல்லாமல், எமது சூழல் முறைமைகளைப் பாதுகாக்கும், எமது கலாசாரங்களை மதிக்கும் மற்றும் எமது மக்களை வலுவூட்டும் ஒரு சுற்றுலாத் துறையை எவ்வாறு உருவாக்குவது என்பதில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

இந்த விடயத்தில் இலங்கைக்கு பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இது விசா நடைமுறையை எளிதாக்குதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களைச் சீரமைத்தல், கூட்டுச் சந்தைப்படுத்தல் பிரசாரங்களை உருவாக்குதல் மற்றும் சர்வதேச முதலீட்டை ஈர்ப்பதற்கான பொதுவான தளங்களை உருவாக்குதல் ஆகியவற்றைச் செய்ய முடியும்.

சுற்றுலாத் துறையை கிராமிய சமூகங்களைச் சென்றடையும், பெண் தொழில்முயற்சியாளர்களை ஆதரிக்கும் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் ஒன்றாக மாற்றுவதே எமது நோக்கமாகும்.

அரசாங்கம் ஏற்கனவே சூழலியல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், சுதேச சுற்றுலா சேவை வழங்குநர்களின் செயல்திறனை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக, சுற்றுலாவின் நன்மைகள் நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்த பகுதிகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் சமூக அடிப்படையிலான சுற்றுலாத் துறையை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சீனப் புத்தாக்க கண்டுபிடிப்புகளுடன் நாம் இணைந்து பணியாற்றினால், எமது நாட்டின் சுற்றுலாத் துறையை உயர் மட்டத்திற்கு மேம்படுத்த முடியும்.

சுற்றுலாவின் உண்மையான பெறுமதி அதன் பொருளாதார நன்மைகளில் மட்டுமன்றி, மனித தொடர்புகளை வளர்க்கும் திறனிலும் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பரிவுணர்வு வளர்க்கவும், அமைதியைக் கட்டியெழுப்பவும் எமக்கு உதவுகிறது. பிளவுபட்ட உலகில், எல்லைகளைக் கடந்து, கலாசாரங்களைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து ஒன்றிணைவதற்கான வாய்ப்புகளை சுற்றுலா உருவாக்குகிறது என்று பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனா மற்றும் மாலைத்தீவு தூதரகங்களின் முக்கியஸ்தர்கள், சீன சுற்றுலா அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் அதிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் பங்கேற்புடன் உலக இரத்த தான தேசிய நிகழ்வு

ஜூன் 14 ஆம் திகதி இடம்பெறும் உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு, ஜூன் 14 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றதுடன், அதனுடன் இணைந்ததாக இரத்த தானம் செய்பவர்களுக்கான பாராட்டு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

"வாழ்க்கைக்கு நம்பிக்கையை கொடுப்போம், இரத்த தானத்திற்காக ஒன்றுபடுவோம்" என்பது உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளாகும். நாட்டின் வருடாந்த இரத்தத் தேவையில் சுமார் 85% நடமாடும் இரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்களினால் செய்யப்படும் ஒப்பற்ற பங்களிப்பாகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

தேசிய இரத்தமாற்ற சேவைக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் 450,000 இரத்த அலகுகளில், 380,000 க்கும் மேற்பட்டவை அல்லது சுமார் 85% இந்த நடமாடும் முகாம்களிலிருந்து சேகரிக்கப்படுகின்றன, இந்த நோக்கத்திற்காக ஆண்டுதோறும் சுமார் 5,000 நடமாடும் இரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இந்த பாராட்டு நிகழ்வில் சுமார் 1,500 இரத்த தானம் செய்பவர்களும் 1,000 இரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்களும் பங்கேற்கிறார்கள்.

இனம், மதம், மாகாணம் அல்லது பிரதேசம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வணிக நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பாடசாலைகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் தனிநபர்கள் உட்பட பல்வேறு வகையான பங்களிப்பாளர்கள் இங்கு விருதுகளைப் பெறுகிறார்கள்.

இந்த ஏற்பாட்டாளர்கள், எந்தவொரு தனிப்பட்ட நன்மையையும் எதிர்பார்க்காமல், தங்கள் செல்வம், உழைப்பு மற்றும் நேரத்தை இந்த நோக்கத்திற்காக தானாக முன்வந்து அர்ப்பணிக்கும் பிரிவினராகும். இலங்கையில் உள்ள இந்த தனித்துவமான இரத்த தான முறைமை உலகின் வேறு நாடுகளில் காணக் கிடைப்பதில்லை.

அரச நிறுவனங்களுக்கு இரத்த தானம் செய்வதற்காக வருடத்திற்கு ஒரு நாளை ஒதுக்கும் திட்டத்தை எதிர்காலத்தில் ஒரு முறையான திட்டத்துடன் மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

பாடசாலை முறைமையினுள்ளும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எதிர்கால இரத்த தானம் செய்பவர்கள் உருவாகும் இடமாக பாடசாலை முறைமை இருப்பதால் இது மிகவும் முக்கியமானது.

இரத்த தானம் செய்பவர்கள் கோவிட் தொற்றுநோய் போன்ற சிரமங்களுக்கு மத்தியிலும், அவர்கள் தங்கள் பொறுப்புகளை மறக்காமல் தங்கள் தேசியப் பொறுப்பை நிறைவேற்றினர். இன்று இலங்கை தன்னார்வ இரத்த தானம் மூலம் 100% இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாடாக மாறியுள்ளது என்றும், அவர்களின் உன்னத பணிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடக அமைச்சர், வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,

நாட்டின் சுகாதாரத் துறையில் இரண்டு முன்னணி துறைகளான, நோய் நிவாரண ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு சேவை மற்றும் தேசிய இரத்த மாற்று சேவை ஆகியவை சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளன. 2010 ஆம் ஆண்டு உலக சுகாதார தாபனம், ஒவ்வொரு நாடும் 2020 ஆம் ஆண்டுக்குள் தன்னார்வ இரத்த தானங்கள் மூலம் 100% இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது, மேலும் இலங்கை ஏற்கனவே 2014 ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைந்துவிட்டது. இதுவரை, உலகம் முழுவதும் 70 நாடுகள் மட்டுமே இந்த நிலையை அடைந்துள்ளன.

இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் முக்கிய இயக்குனர்கள் நாட்டின் இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் இரத்த முகாம் ஏற்பாட்டாளர்கள், அவர்கள் "மிகவும் தூய்மையான இதயங்களைக் கொண்ட விசேட குழுவினர்" இரத்தமாற்ற சேவையை மேலும் நவீனமயமாக்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஸ்டெம் செல்கள் (stem cells) மற்றும் இரத்த பிளாஸ்மாவை (blood plasma) தானம் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும், NAT சோதனை (Nucleic Acid Amplification Test) போன்ற நவீன ஆய்வக சோதனைகளை அறிமுகப்படுத்துவதற்கும், அனைத்து இரத்த வங்கிகளிலும் தரக் கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சு செயற்பட்டு வருகிறது. AABB தரநிலைகள் மற்றும் GMP (சிறந்த உற்பத்தி நடைமுறைகள்) போன்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முறைகளை நிறுவுவதன் மூலம் இரத்தமாற்ற சேவைகளை மேலும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தன, தேசிய இரத்தமாற்ற சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் இரத்த தானம் செய்பவர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு