பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தங்கு தடையற்ற கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எந்தவொரு சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்டிருந்தபோதிலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தங்கு தடையற்ற கல்விக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி மறுசீரமைப்பு குறித்துப் புத்தளம் மாவட்ட மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், ’திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கும் மேற்கொண்ட விஜயத்தின் இடையே, இன்று (17) முற்பகல் புத்தளம் விஞ்ஞானக் கல்லூரிக்கு விஜயம் செய்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

இலங்கையின் தற்போதைய நிலவரத்தின்படி, கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், விஞ்ஞான மற்றும் கணித பாடத்துறைகளின் ஊடாகக் கல்வியைத் தொடர்வதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கற்பதற்கான தங்கு தடையற்ற, சமமான வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பும் கொள்கையுமாகும்.

விஞ்ஞானப் பாடத்துறைக்காக முன்னெடுக்கப்படும் இந்தப் பரீட்சார்த்த முயற்சிகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் விஞ்ஞானம் அல்லது கணிதம் என்பதற்காக நாம் மிகை மதிப்பீடுகளைக் கொண்டிருக்கத் தேவையில்லை. விஞ்ஞானம் மற்றும் கணிதத்தைப் போலவே ஏனைய அனைத்துத் துறைகளும் நமக்கு முக்கியமானவை.

ஒருவர் மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ இருப்பினும், அவர் மக்களுடன் மக்களுக்காகவே பணியாற்றுகின்றார். அங்கே மனிதநேயம் போன்ற மானுடப் பண்புகளும் அவசியமாகின்றன. எதிர்காலத்தில் எமது நாட்டை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்குத் தேவையான மனிதநேயம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் மானுட உறவுகளை மதிக்கும் பரிபூரணமான பிரஜைகளை, ஒரு தரமான கல்வியின் ஊடாக மட்டுமே உருவாக்க முடியும்.

பாடசாலைகளில் பெருமளவு ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அதற்காகச் சுமார் 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்காலத்தில் ஆசிரியர்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கற்றல் என்பது விடயங்களை மனப்பாடம் செய்வது மாத்திரமல்ல. தேடலின் ஊடாகத் தகவல்களைக் கண்டறியும் ஆர்வம் பிள்ளைகளிடம் உருவாக வேண்டும். எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும், எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் சிநேகபூர்வமாக உரையாடினார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණය තවත් ශක්තිමත්ව ක්‍රියාත්මක කරනවා - අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය

නව අධ්‍යාපන ප්‍රතිසංසංකරණය තවත් ශක්තිමත්ව ක්‍රියාත්මක කරන බවත්, කිසිදු ලෙසකින් අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ හකුළන්න කටයුතු නොකරන බවත් අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන හා වෘත්තීය අධ්‍යාපන අමාත්‍ය අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

දිට්වා සුලිකුණාටුවෙන් ආපදාවට පත් පාසල් නිරීක්ෂණය කිරීමෙන් අනතුරුව අද (16) හලාවත ශ්‍රි විජයාරාමයේ විහාරාධිපති, වයඹ පළාත් උප ප්‍රධාන සංඝනායක පූජ්‍ය සුමනසිරි ස්වාමීන් වහන්සේ බැහැදැක අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ පිලිබඳ පැහැදිළි කරමින් අග්‍රාමාත්‍යතුමිය මෙසේ සඳහන් කළාය.

නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණය කාලීන අවශ්‍යතාවක්, විවිධ දේශපාලන ක්‍රියාකාරීන් ජනතාව මුලාවට පත්කරමින් ඉතාම වැදගත් ප්‍රතිසංස්කරණයක් නතර කරන්න උත්සාහ කරනවා. මේ නිසා ආසාධරණයක් වෙන්නේ තමන්ගේම දරුවන්ට කියලා ඒ ජනතාවට අවබෝධයක් නැහැ. ජල ගැලීම් නිසා හලාවත විශාල හානියක් සිදු වුණා. හලාවත රෝහලේ ඖෂධාගාරයටත් විශාල ලෙස හානි සිදු වුණා. එය නැවත ගංවතුරට හසු නොවන ලෙස යථාතත්වයට පත්කර ගැනීමට අවශ්‍යයි. ඒ වගේම හලාවත නගරය ගංවතුරෙන් ආපදාවට පත්නොවන ලෙස සංවර්ධනය කිරීමටත් අවශ්‍යයි. සංචාරක ආකර්ශනයක් තිබෙන හලාවත වෙරළ උද්‍යානය ඉදිකිරීමට කටයුතු කිරීම පිළිබඳවද සතුටු වන බව වයඹ පළාත් උප ප්‍රධාන සංඝනායක පූජ්‍ය සුමනසිරි ස්වාමීන් වහන්සේ මෙහිදී පැවසූහ.

නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණය පිලිබඳ ජනතාවගේ ප්‍රසාදය තව තවත් පළවෙමින් තිබෙනවා. අපි කිසිම ලෙසකින් අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ හකුළා ගන්න කටයුතු කරන්නේ නැහැ. තවත් ශක්තිමත්ව මේ අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණය සිදු කරනවා. හලාවත සංවර්ධන කටයුතු පිලිබඳ යෝජනා අපිට ඉදිරිපත් කරන්න දිස්ත්‍රික් සංවර්ධන කමිටුව හරහා ඒ පිලිබඳ සොයා බලා අවශ්‍ය කටයුතු සිදු කරනවා යැයි මෙහිදී අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය පැවසුවාය.

මහා සංඝරත්නය, පාර්ලිමේන්තු මන්ත්‍රිවරුන්, ප්‍රාදේශිය නියෝජිතයින් හා රාජ්‍ය නිලධාරීන් ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගී වූහ.

අග්‍රාමාත්‍ය මාධ්‍ය අංශය

நாட்டிற்குப் பொருத்தமான ஒரு சிறந்த பிரஜையை உருவாக்குவதற்குத் தேவையான தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டிற்குப் பொருத்தமான ஒரு சிறந்த பிரஜையை உருவாக்குவதற்குத் தேவையான தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாகவும், தரமான கல்வியை வழங்குவதென்பது பாடத்திட்ட மாற்றத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றும் பிரதமர் தெரிவித்தார். அது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கிடைக்க வேண்டிய அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கி ஆரம்பிக்கப்பட வேண்டிய, நீண்ட காலம் எடுக்கக்கூடிய ஒரு பாரிய பணியாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

’திட்வா’ சூறாவளியினால் கடும் பாதிப்புக்குள்ளான சிலாபம் சேனாநாயக்க தேசிய பாடசாலையைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அகில இலங்கை ரீதியில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட அவ்வித்தியாலய மாணவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தரமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இப்பாடசாலைக்கு ஒரு நீண்ட கால வரலாறு இருக்கின்றது. சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர அவர்கள் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்திய சந்தர்ப்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாடசாலைக் கட்டமைப்பிற்குள் உள்ளடங்கிய 54 பாடசாலைகளில் இதுவும் ஒன்றாகும்.

கன்னங்கர அவர்கள் ஒரு பாரிய தொலைநோக்கின் அடிப்படையிலேயே இலவசக் கல்வியைக் கொண்டு வந்தார். அதன் மூலம் நாட்டிற்குத் தேவையான சிறந்த பிரஜையை உருவாக்குவதற்கான தரமான கல்விக்கான அணுகுமுறையை உறுதிப்படுத்துவதே எதிர்பார்ப்பாக இருந்தது. இருப்பினும் இன்று போலவே அன்றைய காலத்திலும் தனிப்பட்ட இலாபங்களைப் பெற்றுக்கொண்ட ஒரு தரப்பினர் இலவசக் கல்விக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நான் பாராளுமன்ற நூலகத்திலுள்ள இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது இடம்பெற்ற பாராளுமன்ற விவாதங்களை வாசித்துப் பார்த்தேன். அதில் சில தலைவர்களின் கூற்றுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இலவசக் கல்வியினால் தமது தோட்டத்தில் ஒரு தேங்காயைப் பறித்துக்கொள்ளக்கூடப் படிப்பறிவற்ற ஒருவரைத் தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதாலேயே அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் நான் மற்றுமொரு விடயத்தையும் அறிந்துகொண்டேன். சகோதரர் வெனுர எதிரிசிங்க இப்பாடசாலையிலேயே கல்வி கற்றிருக்கின்றார். வெனுர எதிரிசிங்க அவர்கள் அடுத்த சந்ததியினருக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும், பிறரது நலனுக்காகவும் போராடித் தனது உயிரைத் தியாகம் செய்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறான உன்னத நோக்கங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், எமது நாடு இன்றுள்ள நிலையில் அல்லாமல் மிகச் சிறந்த நிலையில் இருந்திருக்கும்.

இவ்வாறான உன்னத நோக்கங்களைக் கொண்ட இளைஞர்கள் தமது உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் விரும்பவில்லை. அவ்வாறான சிறந்த பண்புகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான குடிமக்களை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

உங்களது திறமைகள் மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் மிக உயர்ந்த நிலைகளை எட்டக்கூடிய ஒரு பொருத்தமான சூழலையும் கல்வி முறைமையையும் உருவாக்குவதே எமது நோக்கமாகும். தனக்காக மாத்திரம் அல்லாது தான் சார்ந்த சமூகத்தை மாற்றுவதற்கும், சமூகத்திற்குத் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும், ஒரு நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், பிறரைப் புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள, மனிதநேயம் மிக்க குடிமக்களை உருவாக்குவதையே எமது கல்விக் கொள்கையின் மூலம் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இத்தகைய சிறந்த வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். நாட்டுக்கு மாத்திரமன்றி உலகிற்கே முக்கியமான ஒரு பாடசாலையாக இதனை மாற்றியமைக்க உங்களால் முடியும் என நான் நம்புகின்றேன். பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு முகம் கொடுத்த சிலாபம் கல்வி வலயத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அதற்கான சக்தியும் தைரியமும் இருக்கின்றது என்பது புலப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக, ஹிருணி விஜேசிங்க, முஹம்மது பைசல் மற்றும் சிலாபம் சேனாநாயக்க தேசிய பாடசாலையின் அதிபர் எஸ்.பி.என்.எஸ். பத்திரண உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

The Government is taking steps to regulate early childhood education to ensure quality education while enhancing the professionalism of preschool teachers. — Prime Minister Dr. Harini Amarasuriya

Prime Minister Dr. Harini Amarasuriya stated that the Government is taking steps to maintain early childhood education within an appropriate regulatory framework, while ensuring quality education by enhancing the professionalism of preschool teachers.

The Prime Minister made these remarks while participating in the awareness programme for preschool teachers of the Puttalam District on the National Early Childhood Education Curriculum Framework, held under the theme “A Safe World for Children, A Creative Future Generation” on the 16th of January at the Sudasuna Hall in Chilaw.

The Prime Minister stated,

As a government, the main objective of our government in 2024 was to bring about a transformative change in this country. We bear a major responsibility in achieving that transformation. When we assumed office, one of our primary responsibilities was to build a stable and resilient economy. However, I believe that with equal responsibility and commitment, our government has prioritized creating a transformative change in the education system of the country. We assumed office with that objective in mind. The discussions within our party and political movement on the necessary changes in education did not begin recently. They are the result of a long-standing process.

This transformation cannot be achieved overnight or within a single year. It is a step-by-step process. When implementing this decisive and qualitative change within the education system, it is essential to consider the system as a whole. We made this intervention by examining every stage of a child’s educational journey. Therefore, we have recognized early childhood education, from age one to age five, as an integral part of education and development.

Thereby, Early childhood development is viewed as the very first step of our education structure. At present, early childhood education exists in an unregulated manner. Our aim is to develop this early childhood education in an organized and systematic way, while enhancing the professionalism of teachers and ensuring quality education within an appropriate regulatory framework.

Accordingly, the Ministry of Women and Child Affairs and the Ministry of Education have jointly appointed a committee and initiated discussions to formulate a policy and curriculum framework for early childhood education. During the past year, we developed the preschool curriculum framework. We are working towards implementing a unified curriculum across all preschools in a structured manner. It is essential to integrate early childhood development with primary, secondary, and university education. Early childhood development is one of the most critical stages of an individual’s life. The responsibility of socializing the child, introducing them to society in a structured manner, and nurturing a disciplined, empathetic individual lies with you. This is not something that can be achieved at the primary level or beyond.

There is a common criticism that children are not taught letters and numbers at preschool. However, early childhood development is not about formal schooling. It is about helping children to develop their social skills.

It is also an objective of our government to ensure that both preschools and schools become places where parents can confidently leave their children, knowing they are safe.

We are aware of the issues relating to your allowances and pensions. Discussions have been held in this regard between the Ministry of Education and the Ministry of Women and Child Affairs. Granting due recognition to preschool certificates during school admissions is also very important, and the government’s attention has been drawn to all these matters.

The event was attended by Minister of Public Administration, Provincial Councils and Local Government prof. Chandan Abayarathna; Members of Parliament Gayan Janaka, Hiruni Wijesinghe, and Mohamed Faisal; officials of the North Western Province Early Childhood Education Development Authority; and a large number of preschool teachers from the Puttalam District.

Prime Minister’s Media Division

கல்வி மறுசீரமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்போது எதிர்ப்புகள் எழுவது இயல்பே. நாட்டுக்குத் தேவையான முன்னேற்றகரமான சமூகப் பிரஜைகளை உருவாக்குவதற்காக எம்மால் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி முறைமையை எக்காரணம் கொண்டும் கைவிடமாட்டோம்.

அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றபோது, ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பிரதான துறையாகக் கல்வித்துறை இனங்காணப்பட்டிருந்தது எனவும், இவ்வாறான சமூக மாற்றங்களை முன்னெடுக்கும்போது ஒரு சிறிய தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பக்கூடும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். எவ்வாறாயினும், சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் புதிய கல்வி மறுசீரமைப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி மறுசீரமைப்பு குறித்துத் தெளிவுபடுத்துவதற்காகச் சிலாபம் கல்வி வலயத்தின் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் இன்று (16) மாதம்பை செடெக் (SEDEC) நிறுவன மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, 176 பாடசாலைகளையும் சுமார் 76,000 மாணவர்களையும் கொண்ட சிலாபம் கல்வி வலயம் குறித்த சுருக்கமான அறிமுகத்தைச் சிலாபம் வலயக் கல்விப் பணிப்பாளர் முன்வைத்தார். கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்காக வடமேல் மாகாணக் கல்வி அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் பிரதமருக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. அத்தோடு, கலந்துகொண்ட கல்வி அதிகாரிகள் தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டதோடு, கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தயார்நிலை குறித்துப் பிரதமரின் கவனம் ஈர்க்கப்பட்டது.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

தவறுகளை இனங்கண்டு அவற்றைச் சரிசெய்து முன்னெடுக்கப்படுகின்ற புதிய கல்வி முறையின் கீழ், பிள்ளைகளுக்குத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகள் பேணப்படும் வகையில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தக் கல்வி மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதில் புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பானது, கல்வி மறுசீரமைப்பைக் குழப்ப முயற்சிக்கும் தரப்பினரின் நோக்கங்களை முறியடிக்கும் அளவிற்குப் பலமானதாக இருக்கின்றது என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

தொழிற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட ஆகக்கூடிய வரவுசெலவுத் திட்ட நிதி, இக்கல்வி மறுசீரமைப்பின் ஊடாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கிடையிலான டிஜிட்டல் வளங்களின் சமத்துவமின்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிப் பிரச்சினைகளை நீக்குவதற்காகத் தற்போது உரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 6ஆம் தரக் கல்வி மறுசீரமைப்பைத் தற்காலிகமாக நிறுத்தியதன் மூலம் அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம். கல்வியை ஒரு பாரிய மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும் இந்தப் பயணத்தில் மக்களின் அங்கீகாரம் மிகவும் முக்கியமானதாகும்" எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பி.எம்.சி.கே. வன்னிநாயக்க, உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி, பாடசாலை அதிபர்கள், மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க மதகுருமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தேசிய தைப் பொங்கல் விழா அலரி மாளிகையில்...

உழைப்பின் கண்ணியத்திற்கும் இயற்கையிடமிருந்து கிடைத்த பாதுகாப்பிற்கும் நன்றியை வெளிப்படுத்தும் ஒரு உன்னத கலாசார பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில், தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையின் தேசிய கொண்டாட்டம் இன்று (ஜனவரி 15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த தைப்பொங்கல் விழாவை பிரதமர் அலுவலகம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வில் பிரதமர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரின் தலைமையில் தைப் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இந்த விழாவில் இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியை முன்வைத்து கருத்துத் தெரிவித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ,

"இந்த நிகழ்வு தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான கொண்டாட்ட நிகழ்வு. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல துறைகளின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தைப் பொங்கல் கொண்டாட்டம் நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த தைப் பொங்கல் தினத்தில், இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப பாடுபடும் அனைத்து இலங்கையர்களுக்கும், உலக மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இவ்வருட தைப் பொங்கல் தினத்தில், ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒவ்வொரு சமூகத்தின் கலாசார மற்றும் மத உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையில் ஒரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் செயற்பட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டார்.

தைப் பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கிய சாரமாக விளங்குவது, பொறுமை மற்றும் சூழல் மீதான மரியாதை ஆகிய முக்கிய பண்புகளுடன், ஒரு நாடாக முன்னேறுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நாடு புதியதோர் யுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொள்கை மற்றும் மனப்பான்மை சீர்திருத்தங்கள் மூலம் நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இது சவாலானது என்றாலும், அது ஒரு அத்தியாவசிய பணி என்றும் பிரதமர் கூறினார்.

"தைப் பொங்கல் பண்டிகை, ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும், இயற்கையுடனான நமது தொடர்பையும், நமது அன்றாட வாழ்வில் நன்றியுடன் இருப்பதன் மதிப்பையும் நமக்கு நினைவூட்டுகிறது. இன்று இந்த தேசிய தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்து இந்து சமூகத்திற்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர் மற்றும் இந்து சமயத் தலைவர்கள் உட்பட சர்மத தலைவர்கள், அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், சிறப்பு அதிதிகள், இந்து பக்தர்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு