பங்கேற்பு ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் பிரேரிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்திற்கு பிரதமர் அவர்கள் தெளிவுபடுத்தல்.

பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்டின் சுங்கொங் மற்றும் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி திரு.லோரன்ஸ் மார்சால் ஆகியோர் இலங்கை பாராளுமன்றத்தின் ஜனநாயக அணுகுமுறைகள் தொடர்பாக நிலவும் சிக்கல்கள் தொடர்பில், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுடன் திங்கள் (12) அன்று, கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடினார்.
பொதுமக்களது பங்கேற்புடன், வலுவானதும் சக்திவாய்ந்ததுமான துறைசார் மேற்பார்வைக் குழுக்களைத் தாபிப்பதன் ஊடாக, பங்கேற்பு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில், பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார். கொள்கை ரீதியான வழிகாட்டல் மற்றும் தேசிய நலன்கள் தொடர்பான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக, பாராளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளதும் பஙகேற்புடன், தேசிய சபையொன்றைத் தாபித்தல் தொடர்பில் எற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாடு தொடர்பில், அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவது முக்கியமென்பதால், இலங்கை பாராளுமன்றத்தின் விவாதங்களை தொலைக்காட்சியில் நேரடியாக பார்ப்பதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைப்பதாக, பிரதமர் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் மேலும் தெரிவித்தார்.
பொதுமக்களது தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் பதில் அளிப்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகள், பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தின் பாராட்டுதல்களுக்குட்பட்டதுடன், தேசிய மட்டத்திலான விவாதங்களில் இளைஞர்கள் பங்குபற்றுவதன் அவசியத்தினையும் அவர் வலியுறுத்தினார்.
அனைரையும் உள்ளடக்கிய ஒரு ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு, பெண்கள் மற்றும் ஏனைய பாதிக்கப்படக்கூடிய குழுக்கள், அரசியல் செயற்பாடுகளில் பங்குபற்றுதலை இன்னமும் வலுப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் திரு.சுங்கொங் அவர்கள் வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் பிரதமர் செயலாளர் திரு.அநுர திசாநாயக்க அவர்களும், பாராளுமன்றப் பொதுச்செயலாளர் திரு.தம்மிக தசநாயக்க அவர்களும், பிரதமர் மேலதிகச் செயலாளர் திரு.ஹர்ஷ விஜேவர்தன அவர்களும் பங்கேற்றனர்.