முன்னாள் பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் ஆண்டகை அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் கொழும்பில் உள்ள புனித அப்போஸ்தலிக்க தூதரகத்தின் (Vatican Apostolic Nunciature) அனுதாப செய்தியை பதிவுசெய்யும் புத்தகத்தில் இன்று கையெழுத்திட்டார்.

அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் பிரதமர் அவர்கள் வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் அருட் தந்தை பிரையன் உடைக்வே (Rt. Rev. Brian Udaigwe) அவர்களுடன் ஒரு சிறிய கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.